சனி, 24 ஜனவரி, 2015

மாதொருபாகன் பற்றிய எங்களது பாகம்


        வெறும் வாயை மெல்லும் எங்களுக்கு மாதொருபாகன்எனும் அவலை மெல்லுங்களேன்என்று சொல்லி எங்களுக்கு இந்த அரிய வாய்ப்பைப் பயன்படுத்த உதவிய பதிவர் சகோதரி/தோழி மைதிலி கஸ்தூரிரங்கன் அவர்களுக்கு முதற்கண் நன்றி.
       இந்தப் புதினத்தை வாங்க முடியாதச் சூழல். வருத்தம். அப்போதுதான் நண்பர் மலர்தரு மது/கஸ்தூரி அவர்கள் தனது வலையில் தரவிறக்கம் செய்யப் பகிர்ந்திருந்தார். நாங்கள் அவருக்கு நன்றி நவில, அவர் டெல்லி தமிழ் சங்கத்தின் தூணான திரு ஷாஜகான் அவர்கள் பகிர்ந்திருந்ததைத்தான் தந்தேன் எனவே அவருக்குத்தான் நன்றி நவில வேண்டும் என்று கைகாட்ட, திரு. ஷாஜகான் அவர்களுக்கு எங்கள் மனமார்ந்த நன்றி!  அதைப் பகிர்ந்த நண்பர் மது அவர்களுக்கும் எங்கள் மனமார்ந்த நன்றி.
                                ************************************************

        “எழுத்தாளன் பெருமாள்முருகன் இனி இல்லை. அவன் கடவுள் அல்ல. அவன் இனி உயிர்த்தெழப் போவதில்லை.  மறுபிறவியில் நம்பிக்கையும் இல்லை.  இனி அற்ப ஆசிரியனாகிய முருகன் என்பவன் மட்டுமே உயிர்வாழ்வான்.”

இதை வாசித்த போது எங்களுக்கு ராபர்ட் ப்ரௌனிங்க் எழுதிய “பேட்ரியட்” (Patriot) எனும் கவிதைதான் நினைவுக்கு வந்தது.  ஒரு வருடம் முன்பு நாட்டுக்குச் செய்த நற் செயலுக்கு வீர நாயகனாக எல்லோராலும் புகழப்பட்ட, வாழ்த்தப்பட்ட, நடந்த வழிகளில் பூக்கள் தூவி வரவேற்கப்பட்ட நாயகன், ஓராண்டுக்குப் பின் ஏதோ ஒரு மன்னிக்க முடியாத சேதம் நாட்டிற்கு இழைத்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு, கைகள் கட்டப்பட்டு, காண்போரெல்லாம் எறியும் கற்களால் அடிபட்டுக் கழுமரத்திற்குக் கொண்டு செல்லப்படும் போதும், வருந்தாமல் தான் செய்த நற்செயலை தவறாகப் புரிந்து கொண்டதால்தனக்கு  இவ்வுலகில் கிடைக்காத நீதி இறந்த பின் இறைவன் முன் செல்லும் போது கிடைக்கும், என்ற நம்பிக்கையுடன் நடந்து செல்லுகிறான் கழுமரத்தை நோக்கி. வாசிக்கும் ஒவ்வொருவரின் மனதையும் ஒரு போதும் விட்டகலாத அருமையான கவிதை. 

       ஆனால், கவிதை நாயகனுக்கு இருந்த நம்பிக்கை நம் பெருமாள் முருகனுக்கு இல்லை. பதிலாக, ஏறத்தாழ 35 புத்தகங்களை எழுதிய அவர், இனி எழுதப் போவதில்லை என்று சொன்னதோடு நில்லாமல் தான் எழுதிய எல்லா புத்தகங்களையும் பதிப்பகத்தினின்று, தேவையான நஷ்ட ஈடு கொடுத்துத் திரும்பப் பெறப்போவதாகச் சொல்லியது மனதைச் சுடுகின்றது.  ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு பெங்குவினால் வெளியிடப்பட்ட அவரது ஒன் பார்ட் வுமன்க்கு அமோக வரவேற்பு கிடைத்திருக்கின்றது.  இவ்வருடம் அவர் சாகித்திய அகாடமி விருதிற்காகப் பரிந்துரைக்கப்பட்டும் இருந்தார்.  இதற்கிடையில் கொங்கு நாட்டவரின் வரலாற்றை விவரிக்கும் முத்துச்சாமிக் கோனாரின் புத்தகத்தை உயிர்ப்பித்து கொங்கு நாட்டவரின் தனித்தன்மையை உலகறியச் செய்ததால், “க்ரோனிக்ளர் ஆஃப் கொங்குஎன்றெல்லாம் புகழப்பட்ட அவரதுப் புத்தகத்தை (மாதொருபாகனை) அதே கொங்கு வெள்ளாள சமுதாயத்திலுள்ள சிலரை முன்னிருத்தி தீக்கிரையாக்கி அவருள் உயிர் வாழ்ந்த எழுத்தாளரைக் கொன்றே விட்டார்கள்.

       நான்கு வேதங்களும் அத்வைதத்தை ஆதாரமாகக் கொண்டவை. அதனால்தான், ரிக் வேதம் அறிவும், ஞானமுமே இறைவன் என்றும் (ப்ரஞ்ஞானம் பிரம்மா), யஜுர் வேதம் நானே இறைவன் என்றும்” (அஹம் ப்ரம்மாஸ்மி), சாம வேதம், இறைவன் நீயே என்றும் (தத்துவமசி)  அதர்வ வேதம், இந்த ஆத்மாவே இறைவன் என்றும் (அயமாத்மா ப்ரம்மா) சொல்கின்றன. உன்னுள் கடந்து (கட (உன்) உள்) கடவுளைக் காண வேண்டுமே அன்றி கடவுளைத் தேடிப் போய் பயனில்லை என்பதுதான் அத்வைதத் தத்துவம். இத்தத்துவத்தின் அடிப்படையில்தான், சம்ஸ்க்ருதத்தில்  மொழியாக்கம்  செய்யப்பட்ட வேதங்களை  வாசிக்காமலேயே ,  நம் முன்னோர்களான சித்தர்களாலும், முனிவர்களாலும் த்யானத்தில் ஆழ்ந்து தன்னுள் உறையும் இறைவனாம் சிவலோகத்தையும், சிவ யோகத்தையும், சிவ போகத்தையும் தன்னுள் உணர்ந்து பிறவிப் பெருங்கடலை நீந்திக் கடக்க முடிந்திருக்கின்றது.  பிறப்பு, மற்றும் இறப்பு பற்றிய எண்ணம் அவர்களை ஒருபோதும் பாதிக்கவில்லை, பாதித்ததில்லை  என்பது மட்டுமல்ல, மற்றவர்களை அது பாதிக்கும் பட்சம், அவ்விரண்டிலும் அவர்கள் மற்றவர்களுக்கு உதவியே ஆக வேண்டும் எனும் கட்டம் வரும் போது சித்தர்களும், முனிவர்களும் அத்தகையவர்களுக்கு  உதவுவதும் உண்டு. புராணங்களில் எத்தனையோ முனிகள் வாரிசில்லா வேந்தர்களுக்குக் குழந்தை பாக்கியம் பெற அவர்களது விந்தை வழங்கியதாகச் சொல்லப்படுகின்றது. அதே போல் அளவிற்கு அதிகமான அக்கிரமங்களையும், அநீதியையும் இழைப்பவர்களைக் கொன்று குவித்த பரசுராமனைப் போன்ற முனிகள் மட்டுமல்ல, ஊழ்வினைப் பயனாக துன்புறும் இவ்வுலக வாழ்வைத் துறந்து இறையடி சேர முனிகளிடம் தங்களைக் கொன்று உதவ வேண்டும் என வேண்டுவோரைக் கொன்று உதவும் முனிகளும் நம் நாட்டில் இருந்திருக்கின்றார்கள் . மட்டுமல்ல , நான் கடவுள் படத்தில் காசியில் அகம் ப்ரம்மாஸ்மி”(நானே கடவுள்) எனும் தத்துவத்துடன் வாழும் முனிகள் இப்போதும் அப்படிச் செய்து, வேண்டுவோருக்கு மோட்சம் கிடைக்கப் பெற உதவுவதாகச் சொல்லப்படுகிறது.

       13 ஆம் நூற்றாண்டில், வட இந்தியாவில் முளைத்த ஜாதிகள் ஓரிரு நூற்றாண்டுகளில் தென்னகத்தையும் விழுங்கிவிட்டது. பெரும்பான்மையான வலுவுள்ளவர்களும், வாயுள்ளவர்களும் உயர் சாதியினரான போது, சிறுபான்மையினரான வாயில்லா வலுவிழந்தவர்கள் கீழ் சாதியினராக ஆக்கப்பட்டனர்.  அப்போதும் சித்தர்களுக்கும், முனிவர்களுக்கும் இடையே சாதிகள் நுழையவில்லை.  ஆனால், அதன் பின் நம் நாட்டை ஆண்ட முகலாயர்களும், ஆங்கிலேயர்களும் உயர் சாதியினர் சொன்னதை மட்டும் கேட்டதால், இடையில் தோன்றிய சாதி வேற்றுமைகளை வேரறுக்க அவர்களும்  ஒன்றும் செய்ய வில்லை. அப்படி நிறத்திலும், உருவிலும், மொழியிலும் வித்தியாசமில்லாதவர்கள் சாதியால் மட்டும்  நம் நாட்டில் வித்தியாசப்பட்டுப் போனார்கள். அப்பொதும், சித்தர்கள் மற்றும் முனிவர்கள் இடையே சாதிகள் முளைக்கவில்லை. 19 ஆம் நுற்றாண்டின் இறுதியிலும், 20 ஆம் நூற்றாண்டுத் தொடக்கத்திலும், நம் நாட்டவரிடையே ஆங்கிலேயர் பாதிப்பால் பல மாற்றங்களும் வந்தன. செயலிலும், சிந்தனையிலும் வந்த மாற்றங்கள் மூடநம்பிக்கைகளை எதிர்த்துப் போராடும் திறன் உடையவையாய் இருந்தும் சாதியை எதிர்க்கும் திறன் அதற்கு இல்லாமல் போனது.  அப்படிப்பட்ட ஒரு கால கட்டத்தில் திருச்செங்கோட்டில் நடந்ததாகச் சொல்லப்படும் ஒரு கதை தான் பெருமாள் முருகனின் மாதொருபாகன். 

         ஒரு சமூகம், ஊர்கள், அங்கிருக்கும் பிரசித்தி வாய்ந்த மலைக் கோயில் (அர்தநாரீஸ்வரர் கோயில்), அந்தக் கோயில் திருவிழா, அந்த மலையில் பாவாத்தா என்று தெய்வமாகக் கொண்டாடப்படும் ஒரு பெண் தெய்வம், இதனால், அங்கிருக்கும் சுற்றுப்பட்ட கிராமங்களில் பதிவான நம்பிக்கைகள், அந்த நம்பிக்கைகள் அந்த மக்களின் வாழ்வில் எப்படிப் புரையோடிப் போயிருக்கின்றது, என, கொங்குதமிழில் பயணிக்கின்றான் மாதொருபாகன்.

       காளி, பொன்னாள் என்ற இரு முக்கியக் கதாபாத்திரங்கள். அவர்கள் வாழ்வியல், அவர்களின் தனிப்பட்ட வாழ்வு, சமூக நம்பிக்கைகள், குறிப்பாகக் குழந்தை பிறக்கவில்லை என்றால், அந்த மலைக் கோயில் திருவிழாவின் 14 ஆம் நாள், சாமி மலையேறுவதற்கு முந்தைய நாள், அங்கு வரும் முனிகள் மற்றும் சித்தர்கள் மட்டுமல்ல , ஆண்கள்  அனைவரும் ,சாமிகள் என்றும், குழந்தையில்லாப் பெண்கள் இந்த சாமிகளில் எந்தச் சாமியுடனும்/ஆணுடனும் இணைந்தும்  குழந்தை பெறலாம், பிறக்கவில்லை என்றால் அடுத்த வருடம் நடக்கும் திருவிழாவில் 14 ஆம் நாள் இது போன்று இணைந்து பெறப்படும் குழந்தைகள் சாமி பிள்ளைகள் என்று நம்பப்படும் ஒரு வழக்கத்தினாலும், குழந்தை இல்லை என்பதால் எழும் மனதைத் துளைக்கும் உணர்வு பூர்வமான ஊர் பேச்சுக்களும், குழந்தைப் பேறு இல்லாமல் போனாலும், மிகவும் அந்யோன்யமாக, அன்பான தாம்பத்தியத்துடன், வாழும் காளி, பொன்னா வாழ்க்கையை எவ்வாறு பாதிக்கின்றது என்பதுதான் கதை.

       காளி, பொன்னாள் இருவருக்குள்ளும் இருக்கும் அன்பும், அந்யோன்யமான தாம்பத்தியமும், கதை முழுவதும் மிகவும் அருமையாகப் பரவிக் கிடக்கின்றது.  கதைக் களத்தின் வர்ணனைகள், விவரணங்கள், மலையைப் பற்றிய வர்ணனைகள், காளியும், பொன்னாளின் அண்ணன் முத்துவும் குடிப்பதற்காகத் தேடிக் கண்டறியும் மலையின் ரகசியமான, அழகான இடங்களின் வர்ணனைகள், நம் கண்முன் காட்சிகளை விரிய வைத்து, நம்மையும் அந்த இடங்களுக்கே பயணிக்க வைக்கின்றார், அந்த மண்ணிற்கே உரிய மணத்துடன்.

       தம்பதியருக்குக் குழந்தை இல்லை என்றால் சமூகம் என்ன பேச்சு பேசுகின்றது என்பதை, காளியும், பொன்னாவும் அந்த வார்த்தைகளால் படும் கஷ்டங்களின் மூலம் கண் முன் கொண்டுவருகின்றார் ஆசிரியர்.  இப்படிப் பேசப்படுவது இப்போதும் கூட பல கிராமங்களில் இருந்துதானே வருகின்றது. ஒரு சமூகத்தின் நிகழ்வுகள், வாழ்வியல், நாகரீகம் என்று பல தகவல்களைப் பதிந்துள்ளார் என்றால் அது மிகையாகாது.  பல இடங்களில் சாதிகள் பற்றிய சிறிய கேலிகள் இருப்பது ஆசிரியரின் சாதி எதிர்ப்பு பற்றிய எண்ணங்களைப் பிரதிபலிக்கின்றது.

        கதை வலுவிழக்கும் இடங்கள்: குழந்தை இல்லை என்றால், குறைபாடு காளி, பொன்னாள் இருவருக்கும் இருந்திருக்கலாம், இல்லையென்றால் இருவரில் ஒருவருக்கு இருந்திருக்கலாம். இதை ஆசிரியர் ஒரே ஒரு இடத்தில் சொல்லி இருந்தாலும், அதை வலுவாகச் சொல்லாததால் அங்கு சறுக்கல். இந்தக் காலகட்டத்தில் கூட, குழந்தை இல்லை என்றால், சமூகம் பெண்களைத்தான் முதலில் குறை சொல்லுகின்றது. அப்படியிருக்க, இக்கதை சொல்லப்படும் காலகட்டத்தில் இன்னும் மோசமாகத்தான் இருந்திருக்கும். அதனால், காளியின் தாயார், காளிக்கு இரண்டாவது மணம் பற்றி வற்புறுத்துவது, பொன்னாளின் அம்மாவிற்கும் அதில் எதிர் கருத்து இல்லை என்பதால் கதை சரியாகச் செல்வதாகத்தான் உள்ளது. குறை பொன்னாளிடம் என்று சொல்லப்படுவதாக அர்த்தமாகின்றது. ஆனால், அடுத்து, காளியின் அம்மாவும், பொன்னாளின் அம்மாவும், பொன்னாளை திருவிழாவின் இறுதி நாளாகிய 14 ஆம் நாளுக்கு, சாமி பிள்ளை பெற வேண்டி வேறொரு ஆணுடன் இணைய அனுப்ப முடிவெடுக்கிறார்கள் .  குறை உள்ள பொன்னாள் என்பதாக அவர்கள் நினைத்ததால் தானே காளிக்கு இரண்டாவது திருமணம் பற்றிய பேச்சு எழுந்தது. அப்படியிருக்க பொன்னாள் எப்படிச் சாமிப் பிள்ளை பெற முடியும்? காளிக்குக் குறை இருப்பதாக ஆசிரியர் எந்த ஒரு இடத்திலும் சொல்லவில்லை.  பரிகாரமும், கஷாயங்களும் பொன்னாளுக்குத்தான்.

2. காளிக்கு மறுமணத்தில் முற்றிலும் உடன்பாடில்லை என்பதையும், பின்னர் இரு தாய்மார்களும், பொன்னாளை திருவிழாவின் 14 ஆம் நாள் அன்று அனுப்பி சாமி குழந்தை பெற வைக்கலாம் என்று முடிவெடுப்பதை அறியும் காளி, குழந்தை இல்லை என்றாலும், பரவாயில்லை, மறுமணமோ, சாமி குழந்தையோ தேவையில்லை, பொன்னாள் மட்டும் போதும், சாமிக் குழந்தை என்று பெறுவது எல்லாம் முன்பு வழக்கமாக இருந்திருக்கலாம், ஆனால் இப்போது அப்படியிருக்க வேண்டும் என்றில்லை, தனக்கு அதில் உடன்பாடு இல்லை என்றும், பொன்னாள் தன் உடம்பின் ஒரு பாகம் என்பதையும், அவன் பல இடங்களில் சொல்லி, முத்துவிடமும் சொல்லி, மாதொருபாகன் என்ற அர்த்தத்தை அருமையாக, அந்த சமூகத்தின் ஒரு சாதாரண மனிதனின் அடையாளமாகக் காட்டி வரும், ஆசிரியர் இறுதியில் பொன்னாளின் முடிவின் மூலம் பதைபதைக்க வைப்பது மட்டுமின்றி காளியின் மூலம் காட்டும் அர்த்தத்தையே மாற்றிவிடுவது போல் உள்ளது.

       3. திருவிழாவின் 14 ஆம் நாள் பொன்னாளை அவளது பெற்றோரும், தனது தாயும் அனுப்பி விடுவார்களோ என்று அவன் இரு வருடங்கள் திருவிழா நோன்பிக்கு அனுப்பாமல் இருந்து, அப்படிக்  குழந்தை பெறுவதில் காளிக்கு முற்றிலும் உடன்பாடில்லை என்று அறிந்தும், குழந்தை இல்லை என்றாலும், அவர்களது தாம்பத்யம் மிகுந்த அன்புடனும், இனிமையாகவும் இருந்தும், அவனது அன்பை முழுமையாகப் புரிந்து இருந்தும், பொன்னாள் இறுதியில், வீட்டாரின் பேச்சைக் கேட்டு, அன்பானக் கணவனைத் துறந்து, அந்த நாளுக்குச் செல்வது ஆச்சரியமாக உள்ளது.  எந்தப் பெண்ணும், இத்தனை அன்பான கணவன் இருக்கும் போது இது போன்ற ஒரு செயலைச் செய்வாளா என்பது இடிக்கின்றது. அதற்கு இரு பெண்கள் அதுவும் தாயார்கள் துணை நிற்பது நெருடுகின்றது.

       பொன்னாள் புறப்பட்டுப் போகும் போது, அவள் அப்படி யாருடனும் இணைந்து விடக் கூடாது என்று, அவளது அந்தப் பயணம் முழுவதும் மனம் பதைபதைக்கின்றது, கதையை வாசிக்கும் போது. ஆசிரியர் பொன்னாளை அதே பொன்னாளாக மீட்டு வந்துக் கதையை முடிக்க வேண்டும் என்று மனது வேண்டத்தான் செய்தது. பொன்னாள் எவனோ ஒருவனைப் பார்த்து புன்னகைத்து அவனுடன் சேரும் போது மனது வேதனித்தது. காளி அந்தப் பழக்கத்திற்கு முற்றிலும் எதிராக இருப்பதாகக் காட்டிய இடத்திலும், இறுதியில், காளி தன்னை ஏமாற்றிய பொன்னாளை நினைத்துத் துடித்து, வெறுத்துக் கத்தும் இடத்திலும் பிரதிபலிக்கும் கதாசிரியரின் எண்ணங்கள் ஏனோ இந்த சர்ச்சை செய்யும் மனிதர்களின் கண்களில் படாமல் போனது. பொன்னாளையும் அந்த நிகழ்விற்குப் போகாமல், அதற்கு உடன்படாத, அதை எதிர்க்கும் பெண்ணாகக் காட்டி, அந்த நம்பிக்கைக்கு எதிரான ஒரு பெண்ணாக உருவகப்படுத்தி புரட்சிப் பெண்ணாகக் கதையை முடித்திருக்கலாமோ என்றும் தோன்றியதை மறுக்க முடியவில்லை.

          மாதொருபாகன் என்ற தத்துவத்தின் அர்த்தத்தையும், சாமி பிள்ளை என்ற வழக்கத்தையும், கதாசிரியர் இந்தப் புனைவில் முடிச்சுப் போட்டு தவறான கோணத்தில் பார்த்திருப்பதாகத்தான் முடிவு சொல்லுகின்றது. அதனால்தான் பொன்னாளை அந்த சாமிப் பிள்ளை வழக்கத்தை ஏற்பது போல் முடித்துள்ளார். காளியின் மூலம் வெளிப்படும் மாதொருபாகனும், பொன்னாவின் மூலம் வெளிப்படும் மாதொருபாகனும் முரண்படுகின்றது. மாதொருபாகனின் தொடர்ச்சிதான் ஆலவாயனும், அர்த்தநாரீஸ்வரரும் என்றால் அந்த பாகங்களையும் படித்துவிட்டுத்தான் நாம் முழுக் கருத்தையும் முன்வைக்க முடியும்.  இந்தப் பார்வை பாகம் மாதொருபாகனுக்கு மட்டுமே.  முழுப் பார்வை என்று கொள்வதிற்கில்லை.  ஏனென்றால் காளி இறுதியில் ஏமாற்றம் அடைந்து “நீ தவிச்சுக் கிடக்கோணும்டி” என்று சொல்லுவதும் , கயிற்றையும்மரக் கிளையை  பார்ப்பதன் விளைவும்    ஒருவேளை மற்றைய பாகங்களில் பேசப்பட்டிருக்குமோ?  வாசிக்க வேண்டும்.  பேசப்பட்டிருந்தால், ஆசிரியரின் பார்வை எப்படிச் செல்லுகின்றது என்று பார்க்க வேண்டும்.

       மகாபாரதம், புராணங்களில் எல்லாம் சொல்லப்படுவது போல், ஒரு காலத்தில், மலை கோவிலில் நடக்கும் 14 நாள் திருவிழாவிற்கு சித்தர்களும், முனிவர்களும் குழந்தைப் பேறு இல்லாத மாதர்களுக்குக் குழந்தை பெறும் பாக்கியத்தைக் கொடுத்திருக்கலாம். நூற்றாண்டுகளுக்கு முன்பு சாமிக் குழந்தைகளுக்கு சாதி தேவை இல்லாமல் இருந்தது.  ஆனால், பிற்காலத்தில் சாதி அறிய வாய்ப்பில்லாததால் சில குழந்தைகள் பாபக் குழந்தைகள் என சொல்லப்பட்டிருக்கலாம்.  இப்பொதும் சில குழந்தைகள் வாடகைக் கர்பப்பையிலும், தானம் செய்யப்படும் விந்துவாலும் நவீன மருதுவமனைகளில் பிறப்பதுண்டுதானே.  அதே போல், அதே அளவில் அன்று சாமிக் குழந்தைகள் பிறந்திருக்கலாம். அறிவியல் ரீதியாகப்  பேசும்போது  ஒத்துக்கொள்பவர்கள் , ஆன்மீக ரீதியில் சொன்னால் ஒத்துக்கொள்ள மாட்டார்கள்தானே .மட்டுமல்ல ,   பெருமாள் முருகன் சொல்லி வந்த போது திருவிழாவின் 14 ஆம் நாள் மலை எங்கும் காமப்பசியுடன் வரும் ஆண்களும், குழந்தை பெற ஆசையுடன் வரும் பெண்களும் அலைந்து திரியும் இடமாகத் திருச்செங்கோடு ஆகி விடுகின்றது. அத்துடன்  ஏராளமான சாமிக் குழந்தைகளும் அவர்களது பின் தலைமுறையினரும் வாழும் இடமாகத் திருச்செங்கோடு ஆக்கப்பட்டதால் அங்குள்ளோரின் கோபத்திற்கு ஆளாகி இருக்கிறார் பெருமாள் முருகன்.  நிற்க,

          என்றாலும், இப்போது எழுந்திருப்பது தேவையில்லாத சர்ச்சைகள். சல்மான் ருஷ்டி,  Hitchens, Christopher (2007), God Is Not Great: How Religion Poisons Everything, கும், ஏன் நம் சுஜாதாவிற்கும் எதிர்ப்புகள் வரத்தான் செய்தன.  சுஜாதாவின் நாவல் நிறுத்தப்பட்டதும் உண்டு. அது தொடராக வந்ததால். ஒரு எழுத்து என்று வரும் போது மாறுபட்டக் கருத்துக்கள் வரலாம். விமர்சிக்கப்படலாம். நல்ல ஆரோக்கியமான நிலையில். தவறில்லை. ஆனால், அதை முடக்கும் அளவிற்குப் போவது என்பது அதிகபட்சம்.  

இறுதியாகச் சொல்லிக் கொள்வது, நம் வாசிப்பு விரிவடைய வேண்டும். நமது பார்வையும் விரிவடைய வேண்டும். சமூகம், மதம், ஜாதி, நம்பிக்கைகள் என்ற ஒரு எல்லைக்குள் இல்லாமல், எல்லைக்கு அப்பாற்பட்டதாக, ஒரு பக்கச் சார்புடையதாக இல்லாமல், நடுநிலைமையுடன், தீர்க்கமான பார்வையுடன் வாசிப்பு இருந்தால், இது போன்ற சர்ச்சைகள் எழாமல், ஆரோக்கியமான விவாதங்களும், இன்னும் பல நல்ல படைப்புகளும் வெளிவரும் என்பதில் ஐயமில்லை. சமூகத்தில் சமத்துவம் , சம உரிமை, சகோதரத்துவத்தை , சாதி,தீண்டாமை  மற்றும் பாலினம் பேசி தகர்த்தெரிந்த, டாக்டர் அம்பேத்கரால் தீ கொளுத்தப்பட்ட,கொளுத்தப்பட  வேண்டிய  மனுஸ்ம்ருதியும், அதுபோல்  கொளுத்தப்பட வேண்டியபலவற்றையும்  கொளுத்தியும், அது சாம்பலாகாமல் இருக்கும் போது, மாதொருபாகனை அவ்வளவு எளிதாகச் சாம்பலாக்கி விட முடியாது.  சாம்பலாகிப் போக அனுமதிக்கவும் கூடாது. இச்சூதின் பின் பொறாமை உள்ள எழுத்தாளர்களும், சந்தர்ப்பவாதிகளான அரசியல் வாதிகளும் ஏன் கொங்கு சமுதாயத்தினரை இழிவுபடுத்தக் காத்திருக்கும் சந்தர்ப்பவாதிகளும் இருக்கலாம். அவர்களது வெற்றி தற்காலிகமே! தர்மத்தின் வாழ்வுதனைச் சூது கவ்வி இருக்கிறது. ஆனால், தர்மம் வெல்லவே செய்யும்! முருகன், பெருமாள் முருகனாகி மீண்டும் எழுதத்தான் வேண்டும்!  எழுதத்தான் செய்வார்! நம்புவோம் .... காத்திருப்போம். 

  




87 கருத்துகள்:

  1. மாதொருபாகன் நான் இன்னும் படிக்கவில்லை கண்டிப்பாக படிப்பேன் விசாலமாக விமர்சித்து இருக்கிறீர்கள் படிக்கவேண்டுமென்ற ஆவலை கண்டிப்பாக ஏற்படுத்துகிறது..
    பெருமாள் முருகன் கணஅடிப்பாக இன்னும் பலநூல்கள் எழுத வேண்டும் 80தே எமது எண்ணமும்...
    எது எப்படியோ பெருமாள் முருகள் வளர்ந்து கொண்டே....... வரட்டும்.
    தமிழ் மண இணைப்பும் வாக்கு ஒன்றும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி ஜி வாக்கிற்கும், ஜி+ ற்கும்!

      நீக்கு
    2. மிக்க நன்றி நண்பர் ஜி! மாதொருபாகன் சர்ச்சைகள் சூடாக இருப்பது போல் தாங்களும் சூடாக வந்து கருத்திட்டமைக்கு....மிக்க நன்றி ஜி. நீங்களும் வாசித்துப் பார்த்து தங்கள் கருத்தைப் பதியலாம். மிக்க நன்றி!

      நீக்கு
  2. பாடிய வாயும் ,ஆடிய காலும் மட்டுமல்ல ,எழுதிய கையும் சும்மா இருக்காது ,அதை பெருமாள் முருகனின் விசயத்தில் பார்க்கத்தான் போகிறோம் !
    த ம 2

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி பாவான் ஜி! ம்ம் அவர் எழுத வேண்டும் நிச்சயமாக! எழுதுவார்!

      நீக்கு
  3. உங்கள் பார்வையை அறிய ஆவலாக இருந்தேன்.அதற்காக இப்படி குறிப்பிட்டிருப்பது சகாஸ் உங்க அன்புக்கு அளவே இல்லையா!!! patriot கவிதையை இங்கு பொருத்திய விதத்திற்கு உங்களுக்கு சாக்லேட் shower:)) but இந்த முறை சில இடங்களில் என்னால் முழுமையாக உங்களோடு ஒத்துபோக முடியவில்லை:((( உங்க பாணியில் நச்சுனு இருக்கு விமர்சனம். சூப்பர்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி சகோதரி! ஆரோக்கியமான கருத்து பரிமாற்றங்கள் நல்லவையே! நீங்கள் அதைப் பகிரலாமே ! எங்களுக்கும் அது உதவக் கூடும் இல்லையா?! எங்கள் புரிதலை விரிவாக்கிக் கொள்ள. இல்லை உங்கள் வலையில் பதியலாமே! நாங்களும் அறிய உதவுமே. நாங்கள் இன்னும் ஆழமாகப் புரிந்து கொள்ள முடியுமே.

      நீக்கு
    2. ம்ம்ம் எங்கு உங்களால் ஒத்துப் போக முடியவில்லை என்பது சற்றுப் புரிந்தாலும்....முழுவதும் புரியவில்லை....சகோதரி....பகிரலாம் என்றால் பகிர்ந்து கொள்ளுங்கள்....

      நீக்கு
  4. நான் வாசித்துக் கொண்டிருக்கிறேன் துளசி சார்...
    அருமையாகச் சொல்லியிருக்கிறீர்கள்...
    எனக்கு ஊரின் பெயரையும் , கோவிலையும் புனைவாக்கும் போது கற்பனையான பெயர்களாகப் பயன்படுத்தியிருக்கலாம் என்றே தோன்றுகிறது.

    இருப்பினும் முழுவதும் வாசித்து முடித்துவிட்டுச் சொல்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் நண்பரே! கற்பனைப் பெயராகக் கொடுத்திருக்கலாம்தான்.

      மிக்க நன்றி நண்பரே! வாசித்துவிட்டு சொல்லுங்கள்...மிக்க நன்றி

      நீக்கு
  5. 9 நாட்கள் முன்பு தான் என் சகோதரியின் மகள் எனக்கு இந்த லிங்க் அனுப்பினார். நன்றாக எழுதும் ஒரு எழுத்தாளரின் புக் இது அவர் இனி எழுதப்போவதில்லை. என எனக்கு இதை அனுப்பினார்.சரி அப்புறம் படிக்கலாம் என வைத்து விட்டேன். வலை எங்கும் மாதொரு பாகன் என வரவர இப்போது தான் அது தான் இந்த லிங்க் ஆ என பார்த்தால் அது தான் இது.

    தங்கள் விமர்சனம் படிக்க படிக்க....அதை படிக்க ஆவல் தூண்டுகிறது. நல்ல அலசல். நன்றி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாசியுங்கள் சகொதரி...அருமையாக இருக்கும். சொல்லுங்கள் உங்கள் கருத்தை...மிக்க நன்றி!

      நீக்கு
  6. He can apply for asylum in the United States on the grounds..discrimination (outcast), religious oppression, refusal of fundamental civil rights such as freedom of speech, expression, etc. He can walk with to United states with ease with all privileges including free medical, money, etc. Penguin books can vouch for him. This is a open and shut case!

    பின்குறிப்பு:
    இந்தியாவில் பெருமாள் முருகன் செய்தது தவறு என்றாலும், இங்கு இல்லை; இங்கு ஏசுவைப் பற்றியே படங்கள் எடுத்து வெளியிட்டார்கள்--ஒன்றும் செய்யமுடியவில்லை; உனக்கு வேண்டுமானால் படத்தை பார்க்காதே! இல்லை நீ அதை எதிர்த்து வேற படம் எடு அதான் இங்கு கொள்கை!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் நம்பள்கி! நீங்கள் சொல்லியிருப்பது சரியே! அமெரிக்காவைப் போல இங்கு கருத்துச் சுதனந்திரம் இல்லைதான். இந்தியாவில்/தமிழ்நாட்டில் பல சாதிகளும், பழக்கவழக்கங்களும், நாகரீகமும், அரசியலும் பின்னிப் பிணைந்து இருக்கும் போது, உணர்ச்சிவசப்படும் போது எப்படி கருத்து சுதந்திரம் இருக்க முடியும் ? உங்கள் பின் குறிப்பு மிகவும் சரியே! அவர் அங்கு வந்து செட்டில் ஆகலாம் தான்...ஆனால் அவர் இன்னும் எ ழுத வேண்டும் நம்பள்கி!

      நீக்கு
  7. தமிழ்மணம்+1
    யாருடைய மணம் கோணாமல் அழகாக எழுதியுள்ள்ளீர்கள்--பாராட்டுக்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி நம்பள்கி! தங்களின் பாராட்டுகளுக்கு!

      நீக்கு
  8. முதலில் மது அவர்களின் தளத்தின் மூலம் இந்த நாவல் பற்றிய சர்ச்சையை அறிந்தேன்... பின்னர் அவரே பரிந்துரைத்த, வீரா என்பாரின் முகநூல் விமர்சனத்தால் ஈர்க்கப்பட்டு, மாதொரு பாகனை தரவிறக்கம் செய்து இன்று காலைதான் படிக்க தொடங்கினேன்...

    உங்களின் இந்த பதிவு உங்களை பற்றி வியக்கவும் மலைக்கவும் வைக்கிறது !

    நாவலை பற்றி பேசுவதற்கு முன்னால் மிக துல்லியமான, உண்மையான, ஆணித்தரமான வரலாற்று அறிமுகம் !

    சற்றும் உணர்ச்சிவசப்படாமல் மிக கவனமாக வாசித்து விமர்சித்துள்ளீர்கள்.

    நீண்ட பின்னூட்டமிடும் ஆவலுடன் வாசித்து கடைசி பாராவில் கண்கள் கலங்கி, வார்த்தைகள் வரவில்லை !

    ஆமாம் ஆசானே, கருத்து வேறுபாடுகள் தவறில்லை ஆனால் கருத்திட்டவனின் கைகள் வெட்டப்படும்போது குரல்வலை நெறிக்கப்படும்போதும்தான் அயர்வு வருகிறது !

    " சமூகத்தில் சம உரிமையை, சாதி மற்றும் பாலினம் பேசி தகர்த்தெரிந்த, டாக்டர் அம்பேத்கரால் தீ கொளுத்தப்பட்ட மனுஸ்ம்ருதியும், கொளுத்தப்பட வேண்டியவைகளைக் கொளுத்தியும் அது சாம்பலாகாமல் இருக்கும் போது, மாதொருபாகனை அவ்வளவு எளிதாகச் சாம்பலாக்கி விட முடியாது. சாம்பலாகிப் போக அனுமதிக்கவும் கூடாது. "

    ஆரம்பம் முதல் இறுதிவரை எந்த குறையுமற்ற, யதார்த்தமான, உணர்ச்சிவசப்படாத இந்த விமர்சனத்தை, படித்து சக பதிவாளனாய் உங்களைப்பற்றி பெருமை படுகிறேன்.

    நன்றி
    சாமானியன்






    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி நண்பரே! தங்களது பாராட்டிற்கும் கருத்திற்கும். இத்தனை தூரம் எங்களைப் பாராட்டியது மிகவும் சந்தோஷமாகவும் ஊக்கம் அளிப்பதாகவும் இருக்கின்றது. தங்களின் முதிர்ச்சியான எழுத்தை நாங்கள் மிகவும் ரசிப்போம். தாங்கள் ஆழ்ந்த கருத்துக்களையும் முன் வைப்பீர்கள்.

      மிக்க நன்றி நண்பரே!

      நீக்கு
  9. மீண்டும் அவர் எழுத வேண்டும்... முன்பை விட தீவிரமாக, சிறப்பாக, சலிக்காமல்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி டிடி! ஆம் அவர் மீண்டும் எழுத வேண்டும்....

      நீக்கு
  10. ****பொன்னாள் புறப்பட்டுப் போகும் போது, அவள் அப்படி யாருடனும் இணைந்து விடக் கூடாது என்று, அவளது அந்தப் பயணம் முழுவதும் மனம் பதைபதைக்கின்றது, கதையை வாசிக்கும் போது. ஆசிரியர் பொன்னாளை அதே பொன்னாளாக மீட்டு வந்துக் கதையை முடிக்க வேண்டும் என்று மனது வேண்டத்தான் செய்தது. பொன்னாள் எவனோ ஒருவனைப் பார்த்து புன்னகைத்து அவனுடன் சேரும் போது மனது வேதனித்தது.***

    நமது கலாச்சாரத்தில் நாம் ஊறி கற்றது, பெற்றதெல்லாம் இதுபோல் நமக்கு வரும் உணர்வுகள்தான், சகா மற்றும் சகோதரியாரே. உணர்வுப்பூர்வமாக அழகாக அதை ச்சொல்லியிருக்கிறீர்கள்! வாழ்த்துக்கள்!

    பொன்னாள் இதுபோல் போவதை நம் கூடப்பிறந்த சகோதரி அல்லது நம் தோழி ஒருவர், அல்லது நமது தெருவில் வாழ்ந்துகொண்டிருக்கும் ஒரு மூத்த சகோதரி தவறான வழியில் போவது போலவும், அவள் எப்படியாவது அவ்வழிமாறி, மனம் திருந்தி தப்பி வந்து விடவேண்டும் என்ற உணர்வுகள்தான் நமக்குத் தலைதூக்கும் . இதுபோல் வரும் உணர்வுகள்தான் "மனிதம்" என்பதே என்று நம்புகிறேன். விலங்குகளுக்கும் நமக்கும் உள்ள வித்தியாசமே இதுபோல் தவறுகள் நடக்கப்போகும்போது அது நடக்கக்கூடாது என்று துடி துடிக்கும் நம் மனநிலைதான்.

    அப்படி ஒரு தவறை ரசித்து அரங்கேற்றி அதை "நடக்கவைப்பவரை" வெறுப்பதும் நம்மில் பலரிடம் ஏற்படும் ஒரு உணர்வுதான். அதன் வெளிப்பாடே இன்று நடந்துகொண்டிருக்கும் போராட்டங்கள்..

    விமர்சனத்திற்கு நன்றிங்க!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அவர்கள் குழந்தை இல்லாமலேயே “நானொரு குழந்தை நீ ஒரு குழந்தை ஒருவர் மடியிலே ஒருவரடின்னு போயிருந்தா நல்லா இருக்குமேன்னு ஒரு ஏக்கம்தான்...ஏன்னா காளி, பொன்னாளின் அன்பு அப்படித்தான் படைப்பாளியால் படைக்கப்பட்டுள்ளது. திருமண உறவில் 12 வருடம் ஆனாலும்இது போன்ற ஒரு அன்பு நிகழ்வில் ஒரு சில தம்பதியரிடையே காணலமாக இருக்கலாம் ஆனால் பெரும்பான்மையாக நிகழ்வது என்பது குறைவுதான். எங்கள் வாசிப்புக் குறைவாக இருக்கலாம் என்றாலும் வாசித்த அளவில் எழுத்திலும் கூட அப்படிச் சொல்லப்பட்ட்தாக இல்லை. இது புனைவுதான் என்றாலும் அந்த அன்பான உறவு மனதைச் சிலிர்க்க வைத்தது. நண்பரே. ஆனால் படைப்பாளி பெருமாள் முருகனுக்கு அது இலக்கியம், அவர் நடந்த்தாக நம்ப்ப்படும் ஒரு நிகழ்வின் அடிப்படையில் எழுதி இருப்பதால் அவர் கதையை அந்தக் கோணத்தில் சொல்லி இருக்கிறார். அவர் படைப்பாளி. நாங்கள் வாசகர்கள் அவ்வளவே. அவருக்கு உரிமை உண்டு எப்படி வேண்டுமானாலும் அவரது படைப்பைக் கொண்டு செல்ல. நாங்கள் எங்கள் உணர்வைச் சொன்னோம் அவ்வளவே நண்பரே!

      மிக்க நன்றி நண்பரே!

      நீக்கு
  11. அந்தரங்கம் என்பதன் பொருள் எது!?..

    அன்பின் ‘’ வருண்’’ அவர்கள் கூறுவது போல -

    ரசிக்கப்பட்ட தவறொன்று அரங்கேற்றப்பட்டிருக்கின்றது!..

    பதிலளிநீக்கு
  12. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஏன் நம்பள்கி கருத்தை நீக்கிவிட்டீர்கள்! மிக அருமையான் கருத்து. எங்கள் கருத்தை இடும் முன்னரே நீக்கிவிட்டீர்களே! ஏன்?!

      நீக்கு
  13. இந்த பின்னூட்டம் பதிவுக்கு தொடர்பில்லாதது. நீங்க மட்டும் எழுதுறீங்களா? இல்லை உங்க மனைவியும் சேர்ந்து எழுதுவாங்களா? நீண்ட நாட்களாக கேட்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். சில எழுத்து நடை வித்தியாசத்தை வைத்துக் கொண்டு இதை கேட்கத் தோன்றியது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. துளசிதரனும், தோழி கீதாவும் சேர்ந்து இந்த வலைத்தளத்தில் எழுதுவது. சில பதிவுகள் இருவரும் சேர்ந்து. சில பதிவுகள் தனித்தனியாக. ஆம் நண்பரே கருத்துக்கள் ஒத்திருந்தாலும், நடை வித்தியாசப்படும். சரியே!

      மிக்க நன்றி நண்பரே!

      நீக்கு
  14. அருமை!... அருமை!... அருமை!... இந்தப் பிரச்சினை பற்றி இவ்வளவு சரியான பார்வை, விமர்சனம் வேறு யாரும் இதுவரை கூறியதாய்த் தெரியவில்லை. என் பதிவர் மேடையில் (blogger dashboard) இந்தப் பிரச்சினை பற்றி நீங்கள் பதிவிட்டிருக்கிறீர்கள் என்பதைப் பார்த்த அதே நொடி, இணைப்பை அழுத்தி இங்கே வந்துவிட்டேன். காரணம், யார் மனமும் காயப்படாமல், அதே நேரம் நடுநிலையாக எழுத நினைப்பவர்கள் நீங்கள் இருவரும். அப்படிப்பட்ட நீங்கள் கூறினால் இந்தப் பிரச்சினை குறித்து நல்ல ஒரு தெளிவு பிறக்கும் என்ற நம்பிக்கைதான்; (நான் என்னைச் சொன்னேன்!). நம்பிக்கை பொய்க்கவில்லை! நன்றி! நீங்கள் அவர் இப்படி எழுதியது சரி என்றும் கூறவில்லை; அதற்காக, அவருக்கு எதிராக நிகழ்த்தப்பட்டவற்றை நியாயப்படுத்தவும் இல்லை. மாறாக, இரண்டு தரப்பையுமே சாடியிருக்கிறீர்கள். இதுதான் நடுநிலை!

    மேலே சாமானியன் ஐயா அவர்கள் கூறியிருப்பது போல், விமர்சனத்துக்கு முன்பான அந்த வரலாற்று விளக்கம் அருமை! கட்டுரைக்கே அது சிறந்ததொரு முதுகெலும்பாகத் திகழ்கிறது.

    ஆனால், தங்களுக்கெனத் தனி வழிபாட்டு முறை வைத்திருந்தவர்களும், இறையியலை அறிவியல்பூர்வமாக வடிவமைத்த உலகின் முதல்பெரும் அறிஞர்களுமான சித்தர்களை நீங்கள் மறை (வேதம்) வழியைக் கடைப்பிடித்தவர்கள் எனப் போகிற போக்கில் கூறுவது திகைக்க வைக்கிறது. இதற்காக யாராவது கொதித்தெழுந்து உங்களிடம் சான்று கேட்டால் என்ன செய்வீர்கள்? அட, நானே இப்பொழுது கேட்பதாகவே வைத்துக் கொள்ளுங்களேன். எனக்கு உங்கள் பதில் என்ன? அறிய விழைகிறேன்!

    நான் இந்த நூலை இன்னும் படிக்கவில்லை. ஆயினும், நீங்கள் கூறியிருப்பதை வைத்து நான் எனது சில கருத்துக்களைக் கூற விரும்புகிறேன்.

    இந்தளவுக்கு அறிவார்ந்த விமர்சனத்தை எழுதியிருக்கும் நீங்கள், இந்தக் கதையை உணர்வு அடிப்படையில் மட்டுமே அணுகியதாகத் தெரிகிறது; இப்படிச் சொல்வதற்காக வருந்துகிறேன்!

    1. பொன்னாள் உடம்பில்தான் கோளாறு என்று கருதும் வீட்டும் பெரியவர்கள் அவளை எப்படி அந்த விழாவுக்கு அனுப்பி வைப்பார்கள் என்று நீங்கள் கேட்டிருப்பது, எனக்குச் சிரிப்பைத்தான் வரவழைக்கிறது. நம் வீட்டுப் பெரியவர்கள் இன்றும் இப்படித்தானே இருக்கிறார்கள்? அவர்கள் செய்பவற்றிலெல்லாம் ஒன்றாவது ஏரணமாக இருக்கிறதா? கடவுள், பேய், பூதம் என வந்துவிட்டாலே அவர்கள் எல்லாவற்றையும் கேள்விகளுக்கு அப்பாற்பட்டுத்தானே நம்புகிறார்கள்? அது போலத்தான் இதுவும். என்னதான், அது வேறோர் ஆணின் மூலம் குழந்தை உண்டாக வைக்கும் சடங்கு என்றாலும், அது கடவுள் தொடர்புடையது, நம்பிக்கை சார்ந்தது என்பதால், அப்படிப்பட்ட விழாவில் அத்தகைய ஒரு சடங்கை மேற்கொண்டால், குறை உள்ளவளுக்கும் குழந்தை பிறந்துவிடும் கடவுள் அருளால் என்ற நம்பிக்கையில்தான் அந்தத் தாய்மார்கள் இருவரும் அப்படி ஒரு முடிவுக்கு வந்திருப்பார்கள். நீங்கள் முதியவர்களின், அதுவும் அவர்களுடைய கடவுள் தொடர்பான நடவடிக்கைகளில் கேள்வியே கேட்க முடியாது; கேட்டால் அதற்குப் பதிலும் கிடையாது.

    2. இவ்வளவு அன்பான கணவன் ஒருவன் இருக்கும்பொழுது எந்தப் பெண்ணாவது அப்படிச் செய்வாளா என்றிருக்கிறீர்கள். எழுத்தாளர் பெருமாள் முருகன் அவர்களோ அல்லது இந்த நூல் பற்றி வேறு யாரோ எழுத்தாளர் ஒருவர் கூறும்பொழுதோ படித்தது என்னவென்றால், தன் கணவனை யாரும் ஆண்மையற்றவனென்று நினைத்துவிடக்கூடாது என்பதாலும், தன் மீதான மலடிப் பட்டம் தரும் வேதனையாலும் வேறு வழியில்லாமல்தான் அவள் அப்படிச் செய்துவிட்டாள் என்பது. எனவே, இந்தக் கேள்வியும் எனக்கு அவ்வளவு சரியாகப் படவில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சித்தர்கள் ஞானிகள். அவர்கள் பாடுவதுதான் புது ராகம். அல்லாமல் எழுதப்பட்ட ராகத்திற்கு அனுசரித்தோ அதை படித்துவிட்டோ அவர்கல் பாடுவதில்லை. அவர்களை வேதம் படித்தவர்களாக்கவில்லை. அவர்கள் சொன்னதும், சொல்லுவதும்தான் வேதம் ஆகின்றது என்பதே.

      ஆம் நண்பரே கொஞ்சம் உணர்வுகள் எழுந்தன என்பது உண்மையே....இன்றும் பெண்களைத்தான் குறை சொல்லுவது வழக்கம்..அப்படியிருக்கும் பொது அப்போது இன்னும் மோசமாகத்தான் இருந்திருக்கும்...அதனால் தான் பொன்னாவிற்கு பரிகாரங்கள், கஷாயங்கள்...அதைச் சார்ந்த முடிவுகள்....
      பொன்னாள் காளியை ஆண்மையற்றவனாகக் கருதக் கூடாது........// நல்ல கருத்துதான். அது அவள் அன்பை ஒரு படி மேலே எடுத்துச் செல்கின்றது

      தன் கணவனை யாரும் ஆண்மையற்றவனென்று நினைத்துவிடக்கூடாது என்பதாலும், தன் மீதான மலடிப் பட்டம் தரும் வேதனையாலும் வேறு வழியில்லாமல்தான் அவள் அப்படிச் செய்துவிட்டாள் என்பது.// ம்ம்ம்ம் இருக்கலாம்...

      மிக்க நன்றி நண்பரே தங்களின் பாராட்டிற்கும், எங்களைப் பற்றிய உயர்வான எண்ணத்திற்கும், விரிவான மிகவும் ஆழமான நேர்த்தியான பார்வைக்கும்... உங்கள் பார்வை மிக நேர்த்தியானது என்பதால் தான் தங்களின் எழுத்தும், பின்னூட்டங்களும் அறிவு சார்ந்தது என்பதாலும் எங்களை மிகவும் ரசிக்க வைக்கும்.

      நீக்கு
    2. உயர்ந்த பாராட்டுக்கள்! மிக்க நன்றி!

      நீக்கு
    3. நான் சொல்ல நினைத்து, ஒதுக்கிய சில வார்த்தைகளை துல்லியமாய் சொன்னதற்கு நன்றி பிரகாஷ் சகா.இன்னும் எழுதிருக்கீங்க.இருங்க பார்த்துட்டு சொல்றேன்:)

      நீக்கு
  15. மேலும், பொன்னாளின் அந்த முடிவு உங்களை மிகவும் வேதனைப்படுத்தியிருப்பதை உணர முடிகிறது. அப்படி ஒரு முடிவைத் தராமல், பொன்னாள் அதை மறுத்து வாழ்ந்து காட்டும் புரட்சிப் பெண்ணாக இருப்பது போல் படைத்திருக்கலாம் என்றெல்லாம் கூறியிருக்கிறீர்கள். இது மிகவும் திரைப்படத்தனமாக இருக்கிறது. பெருமாள் முருகன் அவர்கள் இலக்கியர். இருப்பதை, நடந்ததை இயல்போடு பதிவு செய்யதான் இலக்கியர்கள் விரும்புவார்கள். எனவே, நீங்கள் கூறுவது போன்ற முடிவுகளை அவரிடம் எதிர்பார்க்க இயலாது.

    எல்லாவற்றுக்கும் மேலாக நிற்பது என்னவெனில், உண்மையிலேயே இப்படியொரு வழக்கம், இப்படியொரு விழா அந்தப் பகுதியில் இருந்ததா? ஆம் எனில், இந்த நூலுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் அனைவரையும் பிடித்து முட்டிக்கு முட்டி தட்ட வேண்டும்! இவ்வளவு இழிவான விழா ஒன்று நடத்தப்பட்டது தவறில்லை; அதைப் பதிவு செய்தது தவறா? குற்றவாளி அந்தக் குற்றத்தைச் செய்தது தவறில்லை; அவர் அப்படிச் செய்தார் எனச் சொல்வதுதான் தவறு என்பது போல் அன்றோ இருக்கிறது!

    ஆனால், இப்படியொரு விழா உண்மையில் நடக்கவில்லை என்றால், கோயிலுக்குப் போய் வந்தால் குழந்தை பிறப்பதற்குக் காரணம் இதுவாகத்தான் இருக்கும் எனப் பெருமாள் முருகன் அவர்களே கற்பனை செய்து எழுதியிருந்தால், அவருடைய நம்பிக்கையின்மைக்காக ஊர் முழுக்க உள்ள பெண்களையும், இத்தனை நூற்றாண்டுக்காலத் தலைமுறைகளையும் இழிவுபடுத்தியதற்கு அவருக்கு இது வேண்டியதுதான். இதுவே இந்தப் பிரச்சினை குறித்து எனது பார்வை!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் நண்பரே! பொன்னாளின் முடிவு கொஞ்சம் கலங்கத்தான் செய்தது. நீங்கள் சொல்லியிருப்பது போல் அது ஒரு முடிவை இலக்கியம் எழுதுபவர்களிடம் எதிர்ப்பார்க்க முடியாதுதான். கதையோடு கதாபாத்திரங்களோடு ஒன்றிப் போனதால் வந்தா பாதிப்பு. வெளியில் வந்து பல மணி நேரங்கள் ஆகி இடுகை இட்ட பின் மீண்டும் அதைப் பார்த்த போது ஒரு இலக்கியமான/கலைமயமான
      திரைப்படம் பார்க்கும் போது நாம் யதார்த்த முடிவைத்தானே ஏற்றுக் கொள்கின்றோம் ..அது போலத்தான் என்றும் தோன்றியது....

      ஆம் நீங்கள் சொல்லியிருப்பது போல நாங்களும் எழுதும் போது யோசித்தோம்...அவர் ஆதாரங்கள் தரவில்லையே அவர் கற்பனையாக இருக்குமோ, நடந்திருக்காதோ என்றெல்லாமும் துளசி சொல்ல கீதாவும் வாதம் செய்தோம்...ஏற்கனவே சர்ச்சைகள். நாமும் அதைப் பெரிது படுத்த வேண்டா என்று முடித்துக் கொண்டோம். இருவரது கருத்துமே பெரிதாகிவிட்டது. எனவே கதை அல்லாமல் ஒரு இடுகை உள்ளது இங்கு சொல்லாததை சொல்ல....

      மிக்க நன்றி நண்பரே! தங்களின் விரிவான ஆழமான பார்வைக்கும், கருத்திற்கும்...

      நீக்கு
    2. //எனவே கதை அல்லாமல் ஒரு இடுகை உள்ளது இங்கு சொல்லாததை சொல்ல// - அதுதான் தேவை. :-)

      நீக்கு
  16. நான் இன்றுதான் வாசித்து முடித்தேன். உணர்ச்சிப்பூர்வமாக விமர்சனம் உங்களது. செயப்பிரகாசம் கொடுத்த விளக்கங்கள் சரி. பொன்னாளின் கணவன் அன்பே அவள் சம்மதித்த காரணம் எனபது அத்தம்பதியிருக்கிடையே நடைபெறுவதாகக் காட்டப்படும் காட்சிகளே சாட்சிகள். அவளைப்பொறுத்தவரை சரி. காளியைப்பொறுத்தவரை இரண்டு கெட்ட மனதாகத்தான் காட்டப்படுகிறான். தன் மனைவி செல்வதை அவன் முழுவதும் எதிர்த்தது போலத்தெரியவில்லை. அவள் கவுண்டர் ஜாதி ஆணிடமிருந்து பெறாமல், தீண்டாச்சாதியிடமிருந்து பெற்றுவிட்டால் என்ற உயர்ஜாதி எண்ணத்தை அவன் மூலம் காட்டுகிறான். அதாவது பிறனிடம் சென்று பெறலாம். ஆனால் அந்நபர் தீண்டாச்சாதியென்பது நினைத்துக்கூட பார்க்க முடியாதது. அவனின் நிலை ஒரு ஆம்பிவேலன்ட் நிலை. இழுபறி நிலை. பிள்ளை வேண்டும். மனைவி போகலாம். ஆனால் உயர்ஜாதிப்பிள்ளை ஓகே. இன்னொரு மனமோ, அவள் போகக்கூடாதென்கிறது. இதற்கு ஒரு ஆவ்ரேஜ் காதல் கணவனின் பொசசிவ் உணர்வுகள் காரணம். இது பொன்னாளுக்கும் இருக்கிறது. இருவருக்குமே பொசசிவ் உணர்வுகள் இருப்பதாகக் காட்டுகிறார்.

    அவளின் அவ்வுணர்வு, பிள்ளை வந்தவுடன், கொடுத்தவன் எவரென்று தெரியாது. ஆனால், தன் கணவன் மகிழ்வான். அப்படியாக, அவன் என்றும் மறுமணம் செய்யாது தன்னுடனே இருப்பான் என்ற நினைப்பு அப்பொசசிவ் உணர்வின் மூலம் வந்தது.

    அவனுக்கு, தேவடியா போயிட்டாடி என்று இறுதியில் தலையிலடித்து அழுவது அதே பொசசிவ் உணர்வின் வடிவமே.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி நண்பரே! தங்களின் முதல் வருகைக்கும் கருத்திற்கும்.

      தங்கள் பார்வையின் கோணம் வேறு விதத்தில் ஆழமாக இருக்கின்றது. படைப்பாளி அவர். நாம் வாசகர்கள் படைப்பை ஒவ்வொருவரும் ஒவ்வொரு கோணத்தில ஆராயலாம்தான். அந்த அளவிற்கு ஒரு படைப்பு இருக்கிறது என்றால் அதுவே அவரது வெற்றிதானே நண்பரே! மிக நன்றாக அலசி உள்ளீர்கள்! யோசிக்க வைத்தது உண்மையே!

      மிக்க நன்றி நண்பரே தங்கள் ஆழமான கருத்திற்கு

      நீக்கு
  17. This tragic tale tells more than it attempts to show. In the novel, there is consistently deep bond of love between the couple, that too, even before they become aware of their inability to procreate. But the sorrow of the inability, instead of making them sparing and quarrelsome partners, tightly brings them close to each other in the said bond. I have not seen or read such a bond of conjugal love between any couple, in life, and in Tamil fiction. Only here I read about it. The depth of their love may be to accentuate the contrast later to make the climax painful.

    It is a great novel of human tragedy - and the novelist holds the society responsible for the tragedy, too. He uses his narrative to bring home to us the casteist ugliness in the society and minds of Gounders - which perhaps is the reason for the protest, or one of the reasons.

    It is finely crafted story; but, as many have pointed out, the novelist would have made the tragedy more intensive. Perhaps he might have liked it short - only 160 pages. The conversations, the descriptions of nature, the cultural landscape, maverick but lovely characters like Nallaan Sithappaa - he has handled them absorbingly. I enjoyed reading the novel. But won't re-read for the same reason as you have - I don't want to see the tragic life of truly loving couple to end in a tragedy, although fictitious.

    Varun!

    You write as if the novelist enjoys the sensational scenes in the novel. No. He participates in the agony of the couple. He never stands apart and is judgemental. Only twice or thrice, he speaks to the readers directly. Otherwise, he drags us, readers, along into the vortex of the tragedy of couple. We vicariously suffer. It is not possible for a person to appreciate such novels if he does not have sufficient humanity in him.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Thanks a lot dear malaranban. We agree to your view and we too felt very sad at the end.
      The conversations, the descriptions of nature, the cultural landscape, maverick but lovely characters like Nallaan Sithappaa - he has handled them absorbingly. I enjoyed reading the novel. //

      yes we too enjoyed this character and these parts.

      Thnaksa lot once again!

      நீக்கு
  18. ***மேலும், பொன்னாளின் அந்த முடிவு உங்களை மிகவும் வேதனைப்படுத்தியிருப்பதை உணர முடிகிறது. அப்படி ஒரு முடிவைத் தராமல், பொன்னாள் அதை மறுத்து வாழ்ந்து காட்டும் புரட்சிப் பெண்ணாக இருப்பது போல் படைத்திருக்கலாம் என்றெல்லாம் கூறியிருக்கிறீர்கள்.****

    ஐயா: மன்னிக்கவும், பொன்னாள் இப்படி செய்வதுதான் புரச்சி. பொன்னாள், இதைத் தவெறென்று நினைப்பதுதான் சாதாரணம்.

    பொன்னாள் ஒரு பொம்மை. அவளை இஷ்டத்துக்கு ஆட்டிப்படைப்பது அவளை சுற்றியுள்ள "அறிவுகெட்ட" ஆண்கள். இவர்கள் மூடநம்பிக்கையை பொன்னாள் வாழ்வில் நுழைந்து, அவளைக்குழப்பி, இப்படி செய்து இருக்கிறார்கள். அதேபோல் பொன்னாள் என்கிற பாத்திரத்தை இக்கதையில் ஊர் மேய வைப்பது பொ முருகன் என்கிற ஆம்பளைதான்.

    வேஷிகளை உருவாக்கியது ஆண்கள்தான் -அவர்கள் தேவைக்காக

    குந்தியை உருவக்கிஅவளை கடவுள்களிடம் படுக்க வைத்ததுமொரு ஆம்பளைதான்

    இன்னைக்கு பொன்னாளை பலி கொடுப்பது ஒரு ஆம்பளைதான்..

    அம்மணி, அலங்காரம், ரங்கமணியை உருவாக்கியது ஒரு ஆம்பளைதான்..

    இந்த சாதிக்கார ஆம்பளைள் கேவலமானவர்கள் என்று வினவு போன்ற முட்டாள்கள் கையைக்காட்டுவது தவறு. வினவு தளம் நடத்தும் ஆண்களும் கேவலமானவர்கள்தாம்.

    பொன்னாள் வந்து பொ முருகனிடம் கேட்டாளா என்ன? என்னை எவனோடையாவது படுக்க ஏற்பாடு செய்யுங்கள் என்று??

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சத்யஜித் ரேயின் திரைப்படத்துக்கு ஒரு தமிழ்நாட்டுக் காரனைக்கூட்டிக்கொண்டு போனால் என்னென்ன கருத்துக்கள் சொல்வானோ அதைப்போலத்தான் வருணின் கருத்துக்கள். (இங்கே தமிழ்நாட்டுக்காரன் என்பது தமிழ் மாஸ் ஹீரோக்களுக்கு விசிலடித்து வாழ்பவன்).

      புரட்சி என்ற சொல்லின் பொருள் என்னவென்றால், தான் வாழும் சமூகத்தில் அனைவரும் சரியென்ற செயலுக்கு மாறாகச்செய்யத்துணிதலே புரட்சி எனப்படும்.

      பொன்னாளின் சமூகம் திருச்செங்கோட்டுச் சமூகம். ஸ்ரீ வள்ளி திரைப்படத்தைப்பார்க்க பொன்னாளைக்கூட்டிச்செல்கிறான் காளி. திரைப்படங்கள் கேடுதல் செய்யும் என்ற காலமது என்பதை காளியின் அம்மா எச்சரிக்கிறாள். ஸ்ரீ வள்ளி வெளியிடப்பட்ட வருடம் 1947. வெள்ளைக்காரன் ஆண்ட இந்தியா. அப்போதுள்ள கவுண்டர் சமூகத்தின் உலாவிய அனைத்தையும் ஏற்றுக்கொண்ட கணவன்-மனைவியாகக் காட்டப்படுகிறார்கள் இருவரும். அவர்கள் தாய்மார்களே பொன்னாளை மலையேறும்படி சொல்ல, இவள் ஆமோதித்தல் எப்படி புரட்சியாகும்? இன்று ஒரு எதிர்ப்பாளர் - கவுண்டர் வலைபதிவைப்படித்தால், அவர்கள் இன்னும் சதியை (உடன்கட்டை ஏறுதலை)ப் பெருமையாகக் காட்டுகின்றனர். இப்போதே இப்படியென்றால், 1945ல்?

      ஆண்தான் சமூகத்தின் வாழும்முறையை உருவாக்கினான். மதங்களையும் உருவாக்கினான். பெண்களுக்கு சமூகத்தைப்படைப்பதில் ஓரிடமும் அளிக்கவில்லையெனபதை வருண் சொல்லித்தான் தெரியவேண்டுமா? Why is he laboring the obvious ?

      நாவலின் பிற்புலம், கதாமாந்தர்கள் அனைத்தும் படைப்பாளியின் மனத்திலிருந்துதான் உருவாகின்றன. அப்படியிருக்க, நாவலாசிரியரியர் மனதில் எழுந்த கற்பனையை எப்படி குற்றமாக்குகின்றார் வருண்? நமக்கு விருப்பமான கற்பனையைத்தான் நாவலாசிரியர் செய்ய வேண்டுமென்றால், தயவு செய்து இலக்கியம் படிக்க வராதீர்கள்? Made to order pizza வந்து விட்டது மெக்டொனால்டில். அங்கு போய் ஆர்டர் பண்ணிக்கலாம்?

      நீக்கு
    2. எப்பேர்பட்ட பெண்ணும் ஆண்கள் கட்டமைத்த சமூகத்தை எதிர்க்க முடியாதவர்களாகவும், எதிர்க்கமுடியாமல் அதில் கிடந்து உழல்பவர்களாகவும் காட்டத்தான் இந்த நாவல். இதில் எதிர்ப்பவளாக காட்டிவிட்டால், இந்நாவலின் உயிரைக் கொல்வதாகி விடும்.

      நீக்கு
    3. //எத்தனையோ பெண்கள் கற்பை, உயிரை விட பெரிதாக எண்ணி வாழ்ந்துள்ளார்கள். கல்யானமாகியிருக்க வேண்டும் என்றில்லை; தனக்கு நிச்சயிக்கப்பட்ட மணமகன் இறந்தால் கூட வேறொருவனை மனத்தால் நினைக்கமாட்டேன் என்று கூறி உடன்கட்டை ஏறிய உத்தமப் பெண்கள் வாழ்ந்த பூமி திருசெங்கோடு. //

      மேலும் படிக்க http://www.karikkuruvi.com/2014/12/blog-post_29.html.

      இதற்கு ஒரு பெண் எழுதிய பின்னூட்டமும் அவருக்கு விடுத்த மிரட்டலையும் படிக்கலாம். 2015ல் உடன்கட்டை ஏறுதலைப் பெருமைப்படுத்துகிறார்.

      நீக்கு
    4. நண்பர் வருண்
      புரட்சி என்றால் அதில் யதார்த்திற்கு எதிராக எது செய்தாலும் புரட்சிதானே. இல்லையோ? குழந்தையே வேண்டாம் நீ எனக்கு நான் உனக்கு என்பதும், அதே போல என் அன்பிற்குரியவனை யாரும் ஆண்மை இல்லாதவன் என்று சொல்லக்கூடாது, என் கற்பு போனாலும் பரவாயில்லை என்று நினைப்பதும் புரட்சிதான், அந்தக் கோணத்தில் பார்த்தால்....அதுவும் அந்தக் காலத்தில்....

      நீக்கு
    5. இங்கு யதார்த்தம் என்பது அவரவர் கோணத்தில் வித்தியாசப்படலாம்.

      நீக்கு
    6. //குழந்தையே வேண்டாம் நீ எனக்கு நான் உனக்கு என்பதும், அதே போல என் அன்பிற்குரியவனை யாரும் ஆண்மை இல்லாதவன் என்று சொல்லக்கூடாது, என் கற்பு போனாலும் பரவாயில்லை என்று நினைப்பதும் புரட்சிதான்// - செம்மையாகச் சொன்னீர்கள்.

      நீக்கு
    7. ஒரு போதும் "உலக நடப்பு" என்று ஏற்றுக்க முடியாது. ஒரு கதை எழுதும் ஆசிரியர் என்னவேணா "உலக நடப்பு" என்பது போல் எழுதலாம். அவனுக்கு மன்வியாதி. கதி என்கிற பேரிலொரு சமூகத்தை கேவலப்படுட்தும் ஈனப்பிரவி அவன். அவன் அச்சாதியைச் சேர்ந்தவனாகவும் இருக்கலாம். எல்லா சாதியில் தரமற்றவர்கள் இருக்கத்தான் செய்றாங்க. அதனால் அவனுடைய அசிங்கக் கற்பனை எல்லாம் உலக நடப்பாகிவிடாது.

      அவனுக்கு ஒத்து ஊத மலரன்பன், தமிழன் எல்லாம் காடுமிராண்டி நான் மட்டும் ச்த்யஜித்ரேக்கு சொம்படிக்கும் மேதாவினு தன்னை உயரே தூக்கி வைத்துக் கொள்வது சுத்தமான் அபத்தம்.

      பச்சையாகச் சொல்கிறேனே மனைவியை கூட்டிக் கொடுப்பது சாதாரணம் அல்ல. அப்படி க்கூட்டிக்கொடுப்பது நடப்பது அரிது. அதை ஏற்றுக்கொள்வதுதான் அசாதரணம். அசாராதணம்தான் புரட்சி.

      மரன்பனும், பெ முருகனும் புரட்சிப் பெண்கள் வகையராக்களாக இருக்கலாம். நான் அப்படித்தான் பிறந்தேன் எனலாம். தமிழர்கள் அன்னைவருமே கூட்டிக்கொடுப்பவர்கள் என்றால் அதுதான் சாதாரணமாக நடந்தது என்றால் மலரன்பனை செருப்பால அடிப்பார்கள். அதுதான் நியாயம். இதில் என்ன யாருக்குப் புரியவில்லை??

      நீக்கு
  19. ***Varun!

    You write as if the novelist enjoys the sensational scenes in the novel. No. He participates in the agony of the couple. He never stands apart and is judgemental. Only twice or thrice, he speaks to the readers directly. Otherwise, he drags us, readers, along into the vortex of the tragedy of couple. We vicariously suffer. It is not possible for a person to appreciate such novels if he does not have sufficient humanity in him.****

    Are not you speaking as if you are pe. Murugan himself?? That's funny! LOL

    How do you know your thoughts are the ones he exactly he had?? That's just your notion or NOT?

    Well, I believe THE DELHI RAPISTS / MURDERERS do have humanity in them! Go, talk to them you will sure find HUMANITY in them!

    WHY DONT YOU DEFEND THEIR RAPE as a MISTAKE and they are indeed "great human beings" otherwise?

    We are not talking about humanity here..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. A novel can take up any subject or theme: comedy, tragedy, tragic-comedy. When the novel is a tragedy, you require empathy to feel with the tragedy. Otherwise, it will go above your head. (Your case :-) )

      Empathy is graded in degrees by psychologists. If your degree is zero, you become a human monster like the rapist who raped and killed a woman on board the bus;or Dr Hector in the Holywood movie. If not a zero, but lower to requirment, you become a robber or a burgler. He does not feel empathy with the suffering of his victims; or unwilling to imagine the suffering he causes. The moment he gets the ability to feel empathetic, then he is reformed into a fine human being: this is the theme of MGR's film Thirudaithe. The robber committed his crime joyfully - i.e he was not willing to feel empathetic. When a chance occured accidentally for him to know how much the victim and his family suffered from his criminal act of robbing the only breadwinner of the poor family. he became acutely aware of how much he was lacking the core virtue of feeling empathy, which awareness transforms him. You can watch the film again.

      Tulasidharan has the adequate empathy which is manifest thoroughly in the post. You lack it; hence, you are not willing to know whether the novel is a tragedy at all; and what the author wants us to know.

      All good literature is humanising, provided we are going to it with the right attitude. Mahoru pagan is a human drama, and is much humanising, although it could have been better humanising. Before reading literature of this sort, it is necessary to cultivate the correct attitude towards life and fellow humans.

      It is difficult for you to understand all these and your way of writing style: vituperative and cursing, shows you have a long way to go in progressing to read good literature.

      நீக்கு
    2. Genius Malaranaban:

      Are you defining what is a "novel" now?? To yourself or to the world?? LOL

      I am addressing this issue and concerns in my own way. I have opinions and I am sharing those here. I did not mention YOUR NAME. It does not matter to me. You can certainly have your own opinion and share that. You want to share your thoughts? DO IT as you wish..BUT, that's not what you are doing.. You are keep getting personal on me and trying to prove that I am an idiot highlighting MGR and tamil movies etc..and that you are trying to prove that you are a "genius" by bringing up "Satyajit ray" .

      What you are trying to do is not going to work! LOL

      Because I am not here to get your "certificate"! DO YOU UNDERSTAND? I dont give a DAMN what you are thinking of me. Because you are an "IGNORANT MORON" as you hardly know me.

      In any debate, you can share your thoughts without even mentioning anybody's name- addressing to Varun. why are you doing that??? why are you coming after me, (mentioning styajit ray, MGR and all) leaving the debate?? Let me guess..You are getting personal on me because my thoughts and posts are bothering you so much. If you start name calling and focus on me (proving that you are a genius), it only shows you are an IDIOT! Why are you taking me SERIOUSLY?? Why do you care about idiot'ts responses unless you are an idiot? Do you get my point?

      Share your thoughts without mentioning anybody's name at least NOW ON!

      Dont start comparing who know what and who makes more sense to you. Because NOBODY CARES if you think yourself as a "know-it-all". We have seen million "geniuses" like you! Please dont try too hard.

      Because this is not my blog. I need to repect this blog owner and the cleanliness here.

      நீக்கு
    3. This blog post treats Madhoru Pagan just as a novel, a literary product. It does not deal with the social and political controversies surrounding it and its author. So, here, we ought to tell how it is a good product or bad, how it impacted you negatively or positively. How the blogger's views gell with yours, or differ from yours. This is sharing. Not cursing and using the comments arena for one-upmanship. I have written closely to the novel. Write a blogpost on the political and social controversies of the novel in your blog and I shall debate with you there - in English sure!

      நீக்கு
    4. ****This blog post treats Madhoru Pagan just as a novel, a literary product. It does not deal with the social and political controversies surrounding it and its author.***

      So what?

      This blog expects public opinion. That's why I am HERE! It does not care the public is an MGR fan or Satyajit Ray asslicker! DO YOU UNDERSTAND?

      ***So, here, we ought to tell how it is a good product or bad, how it impacted you negatively or positively.***

      We ought to??? Who is WE??

      Speak for yourself. Dont speak for me! You share your opinion! Let me share mine!

      I can certainly oppose the views of the blogger's post. It is my freedom of speech.

      The blogger can filter my posts as he/she has been moderating. YOU SHOULD HAVE KNOWN THESE FACTS!

      ***How the blogger's views gell with yours, or differ from yours. ***

      Yeah, So??

      ***This is sharing. Not cursing and using the comments arena for one-upmanship. ***

      If I remember correct, you are the one first called "Tamils are idol-worshipping morons". and pretending that you are a Satyajit ray fan and so YOU ARE "SUPERIOR" than others who have a different opinion -opposing yours .

      You shoud have shared your opinion about this novel and GTFOH!

      ***I have written closely to the novel. ***

      Not TRUE!

      You started countering my argument besides that.

      I said it is Men world. Men creates women like ponnaaL for their convenience. I said, MEN ARE FILTHY! Pe. Murugan is also filthy man! So are you! So am I.

      You started saying that it is a well-known fact!

      I was not telling you that.

      I was talking to people those who DO NOT UNDERSTAND how men manipulated women!

      You brought up Satyajit ray and MGR here to show yourself as "GREAT"!

      You should have shared your opinion without insulting Tamils as idol-worshipping morons!

      ***Write a blogpost on the political and social controversies of the novel in your blog and I shall debate with you there - in English sure!***

      You must be living in your own world thinking that you are greatest.

      Of course I have shared my opinion in my blog about pe Murugan and his "freedom of speech"

      You are new to this blog-world and of course ignorant. That's why you are saying this.

      *** Write a blogpost on the political and social controversies of the novel in your blog and I shall debate with you there - in English sure!***

      READ what I have said above!

      If I remember correctly, I have written my responses in Tamil till some moron called "maranban" started his responses in English. Are you blaming me for that?

      Why dont you speak to that moron, please?

      நீக்கு
  20. ****புரட்சி என்ற சொல்லின் பொருள் என்னவென்றால், தான் வாழும் சமூகத்தில் அனைவரும் சரியென்ற செயலுக்கு மாறாகச்செய்யத்துணிதலே புரட்சி எனப்படும்.***

    Really? LOL

    So, Did you live with ponnAL and you know that every infertile male sent out his wife? LOL

    What if the woman had the "real problem"? That's really a common problem not men being infertile EVEN TODAY??

    Everything come out of pervert's thoughts as "fiction or imagination"? The pervert dont care about anything. He is living in his filthy world.

    One pervert tells a story based don his filthy thoughts! Another pervert is defending that. Because perverts can only understand each others' thoughts. How do you like my logic?

    My go get your pepperoni pizza and eat!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. புரட்சி என்றால் என்ன என்பதைச்சொன்னது இங்கு ஒருவர் பொன்னாவை மலையேறும் வழக்கத்தை எதிர்க்கும் புரட்சிப்பெண்ணாகக் காட்டியிருந்தால் நன்றாயிருந்திருக்கும் என்று சொன்னதற்குப் பதில்.

      கதை நடந்த ஆண்டு 1945ம் அதற்குப்பின்னும். அன்று ஆணாதிக்க சமூகத்தில் பெண்கள் அடிமைகள். அச்சமூகத்தை எதிர்க்கமுடியா வலிமையற்றவர்கள். ஏன் எதிர்க்க வேண்டும் என்று சிந்திக்கவியலாதபடி மூளைச்சலவை செய்யப்பட்டவர்கள் (இன்றும் கூட என்ன கிழித்துவிட்டது?). அப்படிப்பட்ட காலத்தில் அவளை பாரம்பரிய வழக்கத்தை எதிர்க்கும் பெண்ணாகக் காட்டினால், நாவல் செயற்கையாகிவிடும் என்பது அவருக்குச் சொன்னது வருண்.

      நீக்கு
  21. விரிவாக அலசி இருக்கிறீர்கள்.

    பேரைச் சொன்னாலும் ஊரைச் சொல்லாதே என்பார்கள். அதுபோல இவர் நடந்து கொண்டிருந்தால் பிரச்னை இருந்திருக்காதோ என்னவோ....

    நம்முடைய சுதந்திரம் என்பது அடுத்தவர் மூக்கைக் குத்துவதாய் அமையக் கூடாது என்பார்கள்.

    படைப்பாளிகள் என்றுமே உணர்ச்சி பூர்வமானவர்கள். அவர்கள் எப்போது என்ன செய்வார்கள் என்று சொல்ல முடிவதில்லை. இவருடைய புத்தகங்களை இனி விற்க வேண்டாம் என்று கேட்டக் கொண்டாலும், நடந்து முடிந்த ஔத்தகக் கண்காட்சியில் மாதொருபாகன்தான் டாப் செல்லராம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம்! நண்பரே! நீங்கள் சொல்லியிருப்பது போல் ஊர் பெயரை சொல்லாமல் இருந்திருக்கலாம் என்பது எங்களுக்கும் பட்டது அதையும் சொல்லியிருக்கின்றோமே. அதனால்தான் பிரச்சனை என்று...

      நீக்கு
  22. ****சத்யஜித் ரேயின் திரைப்படத்துக்கு ஒரு தமிழ்நாட்டுக் காரனைக்கூட்டிக்கொண்டு போனால் என்னென்ன கருத்துக்கள் சொல்வானோ அதைப்போலத்தான் வருணின் கருத்துக்கள். (இங்கே தமிழ்நாட்டுக்காரன் என்பது தமிழ் மாஸ் ஹீரோக்களுக்கு விசிலடித்து வாழ்பவன்).***

    ஐயா என்ன சொல்ல வர்ரீங்க?

    நீங்க, சத்யஜித் ரே வுடைய மரபணுக்கள் பெற்ற சீனியஸு, நாங்க தம்ழி காட்டுமிராண்டிகளுக்கு பொறந்தவனுக என்றா?

    உங்களை நீங்களே சீனியஸுனு சொல்லிக்கிட்டா எப்படி??

    ஐயா, காட்டுமிராண்டிகள்ட்ட Mcdonalds, PIZZA, Sathyajit Ray னு பேசினால் நீங்க சீனியாகிவிட முடியாது.

    ஏதாவது டி என் எ அனாலிஸிஸ் பண்ணி சத்யஜித் ரேவுவுடைய ஜீ ன்ஸ் சீக்வென்ஸையும் உங்களோடதையும் காட்டினால், நம்பலாம்! :)))

    பதிலளிநீக்கு
  23. ////ஸ்ரீ வள்ளி வெளியிடப்பட்ட வருடம் 1947.//

    1945 என்று வாசிக்கவும்.

    பதிலளிநீக்கு
  24. உங்கள் கட்டுரையை தமிழ்மணத்தில் வந்த அன்றே படித்து விட்டேன். அப்போது நான் “மாதொரு பாகன்” நாவலை படித்துக் கொண்டு இருந்தேன். ஒரு நூலைப் படித்து விட்டு, அதனைப் பற்றிய கருத்து சொல்வது நல்லது என்பதாலும், வெளியூர் அலைச்சல் (இப்போது மறுபடியும் செல்ல கிளம்பிக் கொண்டு இருக்கிறேன்) ஆன படியினாலும் இங்கே வருவதில் சற்று தாமதம்.

    உங்கள் மேற்கோளில் காட்டியிருக்கும், “பேட்ரியட்” (Patriot) எனும் கவிதையை இனிமேல்தான் சென்று படிக்க வேண்டும். அந்த ஆங்கிலக் கவிஞரின் காலமும் தேசமும் வேறு. இந்த பெருமாள் முருகனின் காலமும் தேசமும் வேறு வேறு. இந்த நாட்டில் மதத்தை விட ஜாதிதான் பல விஷயங்களை தீர்மானிக்கிறது.

    ஆசிரியர் (கல்விப்) பணியில் இருக்கும், ஒரு விமர்சகர் என்ற பார்வையில் நூலைப் பற்றி நன்றாகவே சொல்லி இருக்கிறீர்கள். ஒரு இலக்கிய அனுபவம் எனக்கு.

    எவரும் எதிர் பாராத, எழுத்தாளர் பெருமாள் முருகனுக்கு நேர்ந்த சோகம், உங்களது மனத்தை மட்டுமல்ல நிறைய பேருடைய மனதையும் தொட்டுள்ளது என்பதனை உங்கள் கட்டுரைக்கு வந்துள்ள விமர்சனங்கள் மூலம் அறிய முடிந்தது. (மலரன்பன் யாரென்று தெரியவில்லை. ஆன போதிலும், அவர் விமர்சனம் செய்யும் முறை நன்றாகவே உள்ளது).

    ”மாதொரு பாகன்” நாவலைப் படிக்காதவர்களுக்கு அந்த கதையில் என்ன இருக்கிறது என்பதனை உங்கள் கட்டுரை எளிமையாக விளக்கியது. நீங்கள் சொல்வது போல அந்த நாவலை அவ்வளவு எளிதில் சுட்டு சாம்பலாக்க முடியாது என்றே தோன்றுகிறது.

    த.ம.9

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி ஐயா! நாங்களும் இந்தக் கதையை வாசிக்கும் வரை யாருடைய விமர்சனத்தையும் படிக்க வில்லை. படித்தால் நமது பார்வை அதைச் சார்ந்து அமையலாம் என்ற எண்ணத்தில். இப்போது பலருடைய வித்தியாசமான பார்வகள் வெளிவருகின்றது. அதை வாசிக்கும் போது ஒரு கதை இந்த அளவிற்கு பலருடைய மனதை பாதித்திருக்கின்றது என்பது...கதையை ஆதரிப்பவர்களுக்கும், அதை எதிர்ப்பவர்களுக்கும் தான்...அதுவே அவரது வெற்றிதானே..எழுத்தில்..ஆனால் நிஜத்தில் அவருக்கு இன்னல்கள்தான். அவர் மீண்டும் எழுத வேண்டும். வருவார் வரவேண்டும்....

      மிக்க நன்ரி ஐயா தங்களின் கருத்திற்கு.

      நீக்கு
  25. எல்லோருக்கும் இந்திய குடியரசு நாள் வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி நண்பரே! தங்களுக்கும் வாழ்த்துக்கள்!

      நீக்கு
  26. வாழ்க நலம்!..
    அன்பின் இனிய குடியரசு தின நல்வாழ்த்துகள்!..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி ஐயா! வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி! தங்களுக்கும் எங்கள் வாழ்த்துக்கள்!

      நீக்கு
  27. netre kalai ungal pathvai padithuvitten. pathvai padithathum மாதொருபாகன் padikka aarvam thundiyathu.
    padiththu mudiththathum ingu vanthiruntha comments kavaniththu vanthen.
    ---

    nadunilaiyana vimarsanam ungalodathu.
    vazthukal thulasi sir matrum geetha madam.

    ***
    சமீபத்தில்  எனது ப்லாக் அட்ரஸ் மாற்றி இருக்கிரேன்.
    www.tirupatimahesh.blogspot.com
    இனி  சமயம் கிடைக்கும்போது அங்கு எழுதுவேன். நிரந்தர  முகவரி அதுதான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி மஹேஷ்! தங்களது கருத்திற்கும் வாழ்த்துக்களுக்கும். உங்களது புதிய ப்ளாக் நோட் பண்ணிக் கொண்டோம். இணைத்து விடுகின்றோம். தொடர்கின்றோம் உங்களை உங்கள் புதிய தளத்தில்!

      நீக்கு
  28. "இனிய குடியரசு தின நல் வாழ்த்துக்கள்!"
    ஜெய் ஹிந்த்!
    நன்றியுடன்,
    புதுவை வேலு
    (இன்றைய எனது பதிவு
    "இந்திய குடியரசு தினம்" கவிதை
    காண வாருங்களேன்)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி ஐயா தங்களின் வாழ்த்துக்களுக்கு! தங்களுக்கும் எங்கள் வாழ்த்துக்கள்!

      நீக்கு
  29. எட்டிப்பார்த்தேன் ரொம்ப பெரிய பதிவாக இருக்கிறது அதற்கு வந்த கருத்துக்களும் மிக நீளமாக இருக்கிறது. இதை எல்லாம் நிதானமாக படித்து கருத்தை உள்வாங்கி சிந்திக்க வேண்டும் அதற்கு இப்போது நேரமில்லை நேரம் இருக்கும் போது வருகிறேன் அவசர உலகத்தில் இருப்பதால் இப்படி ஹீஹீ

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நிச்சயமாக மதுரைத் தமிழா! தங்களுக்கு நேரம் கிடைக்கும் போது வாசித்துக் கொள்ளுங்கள். மிக்க நன்றி !

      நீக்கு
  30. குடியரசுதின வாழ்த்துகள்.

    த-ம1

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி புலவர் ஐயா தங்களின் வாழ்த்திற்கு!

      நீக்கு
  31. ஆசானே வணக்கம்.
    வலைத்தளத்திற்கு வர முடியாத நெருக்கடி. தங்கள் பதிவுகளுக்குப் பின்னூட்டம் இட முடியாத சூழல். இரண்டாவதாக மாதொருபாகன் என்னும் சர்ச்சையில் சிக்கி பரபரப்பாக விவாதிக்கப்படுகின்ற ஒரு நாவலுக்கு நானும் என் பங்கிற்கு எண்ணை வார்க்க விரும்பவில்லை.
    ஆனாலும்
    உங்களின் இந்தப் பதிவு என்னைக் கருத்தெழுதத் தூண்டுகிறது.
    முதலில் நான் சொல்ல விரும்புவது கலை இலக்கியங்களை வெறும் கருத்தாக மட்டுமே சுருக்கிப் பார்ப்பது அபத்தம் என்கிற தெளிவு வேண்டும் என்பதையே!
    இப்புதினத்தை அணுகும் முன் இப்புதினத்தின் மையத்தோடு பெரிதும் தொடர்புடையதாக,
    1972 இல் வெளிவந்த “சூரியனின் முதல் கிரணத்தில் இருந்து சூரியனின் கடைசிக் கிரணம் வரை“ என்ற இந்தி நாடகம், இதே பொருளை மையமாக வைத்து வெளிவந்ததையும், 1980 இல் அது தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு தஞ்சையில் நாடகமாகவே நிகழ்த்தப் பட்டதையும் ஒருங்கு வைத்து எண்ணிப்பார்க்கவேண்டும்.
    கல்வி வணிகர்களை திரு பெ மு எதிர்த்தையும், அதற்குப் பதிலடிகொடுக்கத் தருணம் பார்த்திருந்து, முகம் காட்டாமல் அவர்களின் பணம் இப்போராட்டங்களுக்குப் பின்னணியாக இருந்து உதவியதையும் அறிந்தோர் அறிவர்.
    நான்காண்டுகளுக்குப் பின் ஆட்சி மாற்றமும் சாதி அரசியலும் இதை ஊதிப் பெரிதாக்க வழியமைத்தன.
    பெ மு தவறு செய்யவில்லை என்பது எனது வாதம் அல்ல. அது தனிப்பட்ட ஒருவனின் வாசிப்பு, அறிவு, அனுபவம் சார்ந்தது.
    கோபத்தையும் தவறு எனவில்லை.
    ஆனால் அப்படி நினைப்பவர்கள் அதை இதுபோல் பொதுவெளியில் வைத்து விவாதிக்க வேண்டும். கருத்துச் சுதந்திரத்தின் இன்னொரு புறமிருந்து அவற்றுள் போலி எனக் காண்பனவற்றை, உடன்பாடில்லாக் கருத்துகளை, தோலுரித்துக் காட்டவேண்டும்.
    படைப்பை எதிர்ப்பவர்கள் அவ்வாறு செய்தால், அதற்குப் பதிலளிக்க வேண்டிய கடமை நெருக்கடி படைப்பாளிக்கு நேரும். சும்மா இருப்பாரேயானால் அவருடைய ஆக்கம் தவறு என்பது மறுப்பின்றி நிரூபணம் ஆகும்.
    ஆனால் இந்நிகழ்வில் அவ்வாறு நடக்கவில்லை.
    இதன் மறுதலையாக,
    ந்யோக் என்னும் மரபு இதே பாரதத்தில் சில சமூகங்களில் இருந்திருக்கிறது.
    கணவன் அல்லாமல் மற்றொரு ஆடவனை சில தருணங்களில் ஒரு பெண் சேர்வதைக் குறித்தது அது.
    மேலே சொல்லப்பட்ட நாடகம் அம்மரபின் வெளிப்பாடே!
    இங்குக் கதை வலுவிழக்கும் இடங்காகத் தாங்கள் குறிப்பிடுவனவற்றில் சிலவற்றில் என் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
    முதல் காரணம் குறை பொன்னாளிடம் இருப்பதாக எப்படி அவர்கள் நினைக்காமல் போனார்கள் என்பது பற்றியது?
    இதற்குக் காளியின் குடும்பத்தில் முன்னோர்கள் செய்ததகாக் குறிப்பிடப்படும் இரண்டு நிகழ்வுகள் அதுதொடர்பாகப் பெற்ற சாபங்கள், என ஓடும் ஒரு பார்வையைக் காளியின் குடும்பத்தினரே முன் வைக்கின்றனர்.
    காளியும் மறுமணம் புரிய சம்மதிக்க வில்லை.
    இவ்விரு காரணங்களை வைத்துப் பார்க்கும்போது காளிக்குக் குறையிருக்க அதிக வாய்ப்புண்டு என காளியின் குடும்பமே நினைக்க சந்தர்ப்பங்கள் அதிகம்.
    உங்களது இரண்டாவது வலுவிழக்கும் காரணத்திற்கு நீங்கள் பின்னால் சுட்டும் பின்வரும் கருத்துகளை எடுத்துக் கொள்கிறேன்.
    //பொன்னாள் புறப்பட்டுப் போகும் போது, அவள் அப்படி யாருடனும் இணைந்து விடக் கூடாது என்று,அவளது அந்தப் பயணம் முழுவதும் மனம் பதைபதைக்கின்றது, கதையை வாசிக்கும் போது. ஆசிரியர் பொன்னாளை அதே பொன்னாளாக மீட்டு வந்துக் கதையை முடிக்க வேண்டும் என்று மனது வேண்டத்தான் செய்தது. பொன்னாள் எவனோ ஒருவனைப் பார்த்து புன்னகைத்து அவனுடன் சேரும் போது மனது வேதனித்தது. //
    அப்படி உங்களை என்னை நினைக்கச் செய்ததுதான் நாவலாசிரியரின் வெற்றி. அப்படி நினைப்பதுதான் சமுதாய அறம். ஆனால் நாம் இதைப் படிக்கும் பொழுது காளியின் கண்களைக் கொண்டு அதாவது ஒரு ஆணின் கண்களைக் கொண்டு படிக்கிறோம் என்பதை மறந்துவிடுகிறோம். காலம்காலமாய் நம்மில் படிந்து போன மனோபாவம்தான் இது. இதன் இன்னொரு புறம் பொன்னாளின் மனநிலையிலிருந்து இதை அணுகினால் அது எப்படி இருக்கும்?. அதன் தன்னுடன் தான் போராடும் அவஸ்தை எப்படி இருக்கும்? ‘சாமி‘யுடன் செல்வி செல்லும் போது வரும் காளியின் நினைவு சொல்லும் அதை!
    மூன்று நாட்களுக்கு முன்னால் வந்த நாளிதழ்ச் செய்தி, குழந்தை இல்லாமல் ஒரு பெண்காவலர், துப்பாக்கியால் தன் தலையில் சுட்டுக் கொண்டு தற்கொலை செய்துவிட்டார் என்பது.
    இதற்குக் காரணம், நாகரிகமும் அறிவியலும் வளர்ந்துள்ள இந்நாளி்ல் குழந்தைப் பேறிழந்த ஒரு பெண்ணின் மீது கொடுக்கப்பட்ட அழுத்தமன்றி வேறென்ன?

    ................................................தொடர்கிறது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ****காளியும் மறுமணம் புரிய சம்மதிக்க வில்லை.
      இவ்விரு காரணங்களை வைத்துப் பார்க்கும்போது காளிக்குக் குறையிருக்க அதிக வாய்ப்புண்டு என காளியின் குடும்பமே நினைக்க சந்தர்ப்பங்கள் அதிகம்.****

      எல்லாமே ஒரு அணுமானம்தான். காளியை உருவாக்கியவன், காளியை ஆண்மையில்லாதவனாகக் காட்டுகிறான். சரியா? அத்ற்கேற்றார்போல் கதையை நக்ற்றுகிறான். இதில் ஆராய எதுவும் இல்லை. உங்களை வழி நடத்திச் செல்வது "பெ முருகன்". அவர் காளியை எப்படி வேணா சித்தரிக்கலாம். வாசக்ர் மத்தியில் அவனை எப்படிவேணா ஆக்கலாம். இதில் பொன்னாள் என்ன நினைத்தாள், காளி என்ன நினைத்தான் என்று வாதம்செய்ய எதுவும் இல்லை. வாசகரை அழைத்துச் சொல்வது, பெ முருகன். அவர் உங்களை புதை குழியிலும் தள்ளலாம். பூங்காவிற்கும் அழைத்துச் செல்லலாம்.

      ------------------------

      நளபாகத்தில் "துரை" க்கு அதேபோல் குறை இருப்பதாகத்தான் "ரங்கமணி" நம்பினாள். ஆனால், பங்கஜத்துக்கு குழந்தை பிறந்தது "துரை" யின் விந்துவால்தான் என்பதுதான் உண்மை. ஆனால் ஊர் உலகம் "காமேஸ்வரன்" விதால்தான் பங்கஜம் கருவுற்றாள் என்றுதான் நம்புகிறது. சரியா? அங்கே ரங்கமணியின் அனுமானம் தவறு என்றுதானானது.

      நீக்கு
    2. ***மூன்று நாட்களுக்கு முன்னால் வந்த நாளிதழ்ச் செய்தி, குழந்தை இல்லாமல் ஒரு பெண்காவலர், துப்பாக்கியால் தன் தலையில் சுட்டுக் கொண்டு தற்கொலை செய்துவிட்டார் என்பது.***

      ஐயா இது எத்தனை விழுக்காடு??? இந்தக்காலத்ட்தில் இது அரிதான ஒன்று. ஆர்ட்டிஃபிசியல் இன்செமினேஷனில் இன்று குழந்தை பெற்றுக்கொள்பவர்கள் எத்தனை விழுக்காடு? இன்று என் சொந்ததிலேயே ப்லரும் ஆர்ட்டிஃபிசியல் இன்செமினேஷனில் குழந்தை பெற்றுக் கொள்கிறார்கள். கணவர்களும் திறந்த மனதுடன் இருக்கிறார்கள். அவர்கள் விந்தா இல்லை வாடகை விந்தா என்றுகூட கவலைப்படுவதில்லை. அதற்காக மனைவியை பிற ஆண்களிடம் அனுப்புவதில்லை. இப்படி ஒரு தருணத்தில் வரலாறை கிளறுவதால் யாருக்கும் எந்த நன்மையும் இல்லை! "இலக்கியம் " எழுதுகிறேன் என்கிற சாக்கில் சும்மா சாதி உணர்வையும், சாதிச் சண்டையையும் உருவாக்கி, பெண்களை அவமானப் படுத்தியதுதான் மிச்சம்.

      இவர் கதையால் தாழ்த்தப்பட்டவர்கள் உயரப் போவதில்லை! கவுண்டர்கள் திருந்தவும் போறதில்லை! எல்லோருமே ஒரு வகையில் அவமானப்படுத்தப் பட்டதாகவே உணருகிறார்கள். இதுதான் இவ்விலக்கியத்தால் இவர் சாதித்தது.

      நீக்கு
  32. குழந்தையில்லாத தன் அன்பு மனைவி மீது பாலியல் சார்ந்த ஆதிக்கம் காளிக்கிருக்கிறது.
    பொன்னாளுக்குப் பன்னிரண்டு ஆண்டுகளாகத் தன்மீது கவிழுந்து அழுகி நாற்றமெடுக்கும் ஏச்சும் பேச்சும் எப்படியேனும் கழுவினால் சரி என்னும் மனப்பாங்கு! நிச்சயமாய் அது உடல்சுகத்திற்கானதல்ல. நவீன அறிவியல் அனுமதிக்கும் வாடகைத்தாய் முறை போன்றது அது. கதை நடக்கும் காலத்தில் அதற்கு வழியில்லை!
    அதற்காகச் சாக்கடையில் போய் அவள் விழலாமா? இது அறமாகுமா என்பதைப் பொன்னாள்தான் தீர்மானிக்க வேண்டும்.
    அறம், ““உயிரினும் பெரிதே கற்பு““ என்று கூறும்.
    அறத்தின் வழியில் நின்று நாம் பொன்னாளைப் போகாதே போகாதே என்றும் கூக்குரல் இடலாம்.
    ஆனால் நம்மைச் சுற்றி நடக்கும் நிகழ்வுகள் பலவும் அறத்தின் அடியொற்றி இருப்பதில்லை என்பதே யதார்த்தம்!
    ////நம் வாசிப்பு விரிவடைய வேண்டும். நமது பார்வையும் விரிவடைய வேண்டும். சமூகம், மதம், ஜாதி, நம்பிக்கைகள் என்ற ஒரு எல்லைக்குள் இல்லாமல்,எல்லைக்கு அப்பாற்பட்டதாக, ஒரு பக்கச் சார்புடையதாக இல்லாமல், நடுநிலைமையுடன், தீர்க்கமான பார்வையுடன் வாசிப்பு இருந்தால், இது போன்ற சர்ச்சைகள் எழாமல், ஆரோக்கியமான விவாதங்களும், இன்னும் பல நல்ல படைப்புகளும் வெளிவரும் என்பதில் ஐயமில்லை.////
    என்னும் தங்களின் கருத்தோடு முற்றிலும் உடன்படுகிறேன் நன்றி!
    .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஐயா! "பொன்னாளுக்குப் பன்னிரண்டு ஆண்டுகளாகத் தன்மீது கவிழுந்து அழுகி நாற்றமெடுக்கும் ஏச்சும் பேச்சும் எப்படியேனும் கழுவினால் சரி என்னும் மனப்பாங்கு! நிச்சயமாய் அது உடல்சுகத்திற்கானதல்ல. நவீன அறிவியல் அனுமதிக்கும் வாடகைத்தாய் முறை போன்றது அது" என்கிறீர்கள். இங்குதான் நான் மாறுபடுகிறேன். பொன்னாள் அப்படியொரு முடிவைத் தனக்குப் பிள்ளை வேண்டும் என்கிற சொந்த உந்துதலால், விருப்பத்தால் செய்திருந்தால்தான் அதை நீங்கள் இந்தக் கோணத்தில் எடுத்துக்கொள்ள இயலும். அதாவது, சோதனைக்குழாய் முறை என்கிற வகையில். மாறாக, அடுத்தவர்களின் வாய்க்கு அஞ்சி, தன் மீது (அல்லது தன் கணவன் மீது) சமூகம் சுமத்தும் பழிக்கு அஞ்சி அவள் இப்படிச் செய்திருந்தால் அதை நாம் இந்தக் கோணத்தில் பார்க்க இயலாது இல்லையா? தானாய் விரும்பிச் செய்வது வேறு; அடுத்தவர்களுக்காக வேறு வழியின்றி, விருப்பமில்லாமல் செய்வது வேறு, இல்லையா? இதையேதான் நாம் நேற்றுப் பேசும்பொழுதும் நான் கூறினேன்.

      நீக்கு
  33. நானும் புத்தகத்தினை தரவிரக்கம் செய்து வைத்திருக்கிறேன். படிக்க வேண்டும்.

    விமர்சனத்திற்கு நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாசித்து சொல்லுங்கள் வெங்கட்ஜி! மிக்க நன்றி!

      நீக்கு
  34. கடந்த மூன்று நாட்களாக வலைப்பக்கத்திற்கு வர இயலாமல் போய்விட்டது.

    நண்பர் கஸ்தூரிரங்கன் மூலமாக இந்த புத்தகத்தை பதிவிறக்கம் செய்துவிட்டேன். ஆனால் இன்னும் படிக்கவில்லை. தங்களின் இந்த விமர்சனத்தை படித்து சீக்கிரம் படிக்க வேண்டும் என்று எண்ணியிருக்கிறேன். அருமையான விமர்சனம். ந
    நீங்கள் சொல்வது போல் அந்த பெண் கதாப்பாத்திரத்தை புதுமைப் பெண்ணாக சித்தரித்திருந்தால், இப்படி ஒரு பிரச்சனையை ஆசிரியர் சந்த்தித்திருக்கமாட்டார் என்று தான் தோன்றுகிறது.

    "/குறை உள்ள பொன்னாள் என்பதாக அவர்கள் நினைத்ததால் தானே காளிக்கு இரண்டாவது திருமணம் பற்றிய பேச்சு எழுந்தது. அப்படியிருக்க பொன்னாள் எப்படிச் சாமிப் பிள்ளை பெற முடியும்? காளிக்குக் குறை இருப்பதாக ஆசிரியர் எந்த ஒரு இடத்திலும் சொல்லவில்லை. பரிகாரமும், கஷாயங்களும் பொன்னாளுக்குத்தான்.//"
    சரியான கேள்வி.

    நன்றாகவே அந்த நாவலை உள்வாங்கிப் படித்திருக்கிறீர்கள் என்று புரிகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி நண்பர் சொக்கன்! தாங்கள் படித்து விட்டு சொல்லுங்கள். எங்களுக்கு அதைப் படித்ததும் கதை என்ற அளவில் தோன்றியதை மட்டுமே பார்த்தோம். சாதி ரீதியாகவோ, அரசியல் ரீதியாகவோ அல்லாம் எங்களுக்கு மனதில் தோன்றியதை சொன்னோம். ஒரு வேளை நாங்கள் அதை வாசிக்கும் போது யதார்த்தத்தையும் கால கட்டத்தையும் பாராமல், நாம் வளர்ந்த விதத்தையும், நம் மனதில் ஊன்றிய, இப்போதுள்ள வாழ்க்கை நிலையில் பார்த்தோம்.. ஒவ்வொருவரும் ஒவ்வொரு கோணத்தில் பார்க்கும் போது ஒவ்வொன்றும் சரியாகத்தான் தோன்றுகின்றது. நீங்களும் வாசித்துவிட்டுச் சொல்லுங்கள்....நண்பரே!

      நீக்கு
  35. இதை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து மில்லியன் பிரதிகள் விற்றுவிட்டதென்கிறார்கள்..

    இதை வாசிக்கும் வெள்ளையருக்கு, கவுண்டர்னா என்னனு தெரியாது, சாணான் னா என்னனு தெரியாது, சக்கிலினா என்னனு தெரியாது.

    Trust me it is very hard for them to understand higher and lower caste based on some "BS"!

    அவனுக்கு என்ன புரியும்???

    தமிழர்கள்- பொதுவாக எல்லோருமே-, பெண்டாட்டிக்கு குழந்தை பிறக்கவில்லைனா எல்லா சாதிக்காரனும்தான்.. கூட்டிக்கொடுத்து குழந்தை பெற்றுக்கொள்வார்கள் போல.. இதுதான் தமிழர்களின் வரலாறு என்று புரிந்து கொள்வார்கள். ..

    ஆமா இவனுக ஏன் தமிழ், தமிழன்னு மார்தட்டிக்கிறானுக??? கூட்டிக்கொடுப்பவர்கள் பரம்பரையில் வந்த இந்த தமிழ் நாய்களுக்கு ஏன்ப்பா இவ்வ்ளவு திமிரு? என்று குழம்பிக் கொள்வார்கள்.

    When you share this kind of matter to you westerner, your attempt to insult one particular community will not be taken "correctly".

    They will take.. Tamils used to do that. Indian used to do that. That's how it will be taken.

    நமகெல்லாம் இப்படி பெருமை சேர்த்து தந்த பெருமாள் முருகனுக்கு ஒரு கோயில் கட்டுங்கப்பா! :)))

    பதிலளிநீக்கு
  36. BTW, I did read the novel

    http://www.openreadingroom.com/wp-content/uploads/2015/01/Maadhorubaagan.pdf

    I did read his introduction carefully and of course the "climax" where "ponnAL" becoming "Selvi" and enjoying the sex with a stranger.

    He is trying to give a impression that it is not a fiction. it is very clear from his introduction.

    He name her "Selvi" and buying her "puttu". She is having "wonderful time with the stranger. :)))

    Everything will be acceptable to me, if she is a prostitute who is looking for a customer in the dark. And she finds one. He names her and takes care of her. They both enjoy the sex! That was hilarious!!

    பெ முருகன் அவரு ஆசையை, இச்சையை எல்லாம் தீர்த்துக்கிட்டாரு போல. May be he imagined himself as the "saami" who names ponnaaL as "Selvi"! lol

    பதிலளிநீக்கு
  37. தரவிறக்கி வைத்திருக்கிறேன். இன்னும் படிக்கவில்லை. இங்கே உள்ள பின்னூட்டக் கருத்துக்கள் எல்லாமே கவனத்தில் கொள்ள வேண்டியவைதான். எல்லோருக்குமே தனித்த பார்வை இருக்கிறது. அது அவரவர் சுதந்தரம். எனது கருத்தை பதிவாக விரைவில் வெளியிட இருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் நண்பரே! இங்குள்ளவை எல்லாமே ஒவ்வொன்றும் ஒவ்வொரு பார்வையில். இத்தனை பார்வைகளில் அலசப்படும் போது அதுவே அந்தக் கதாசிரியருக்கு ஒரு வெற்றிதானே இல்லையோ! இந்த பார்வைகளை ஒரு ஆரோக்கியமான விவாதமாகச் செய்திருக்கலாம் யாராக இருந்தாலும். மாறாக அவருடைய புத்தகத்தை எரித்தது, ஊரைவிட்டுத் துரத்தியது எல்லாம் தேவையற்றது...என்பது எங்கள் அபிப்பிராயம்.

      நீக்கு
  38. மிக்க நன்றி கவிப்பிரியன் அவர்களே தங்கள் முதல் வருகைக்கும் கருத்திற்கும். தொடர்கின்றோம் தங்களையும்....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்த நாவல், மிகச் சாதாரணமான நாவலே. அதனால் தான் அதைக் கடந்த நாலு வருடங்களில் தமிழ் மீடியா கண்டு கொள்ள வில்லை. நாமக்கல் மாவட்ட கல்வி கொள்ளையர்கள் இவர் மீது கொண்டிருந்த குரோதம் தான் இப்போது சமயம் பார்த்து வெளிப்பட்டு திசைமாறி நாவலை சாக்காக வைத்து தனி மனித உரிமை மீறலுக்கு வித்திட்டிருக்கிறது. இது கண்டிக்கப்பட வேண்டியதே. ஆனால் எழுத்தாளரின் எழுத்து பல இடங்களில் சரோஜாதேவி நாவலின் தரத்துக்கு இறங்கி விட்டதை நிச்சயம் கண்டித்தாக வேண்டும். மிக முக்கியமான விஷயம், இந்த நாவல், ஒரு நிறுவனத்தின் நிதி உதவி பெறுவதற்கு உரிய. ஆவணமாகவே உருவாக்கப்பட்ட தாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதாவது திருச்செங்கோடு பகுதியில் குறிப்பிட்ட ஒரு சாதியினர் இப்படித்தான் இருந்தார்கள் என்று நிரூபிக்கும் விதமாகவே நாவல் படைக்கப்பட்டுள்ளது என்று ஆகிறது. அதுதான் நோக்கமென்றால் கட்டுரை வடிவத்தை அல்லவா அவர் நாடியிருக்க வேண்டும் ! தமது சுய சிந்தனையை மீறி, பதிப்பாளரின் வற்புறுத்தலுக்கும் உதவித்தொகைக்கும் உடன்பட நேரிட்டதால் வந்த அபாயமே இது! துரதிர்ஷ்டவசமாக பதிப்பாளரின் பொறுப்பணர்ச்சியை இதுவரை யாரும் கேள்வி கேட்கவில்லை. அம்பு அடி வாங்குகிறது, வில் தப்பிவிட்டது.

      நீக்கு