திங்கள், 28 அக்டோபர், 2013

தொலைபேசியா?!!  தொல்லைபேசியா?!!!

(என் நண்பரின் அனுபவம்.  அதை அவர் சொல்ல அதை இங்கே பதிவு செய்திருக்கிறேன்)

நான் என் வீட்டில்  சமையல் செய்து  கொண்டிருந்த. போது ஃபோன் ரிங்க். எடுத்து காதுக்கு ஒற்றினேன்.

ஹலோ!

ஹலோ! அண்ணி எங்க இருக்கீங்க?

நீங்க கூப்பிடிருக்கிறது லாண்ட் லைன்..... எங்க இருக்கீங்கனு கேட்டா என்னங்க அர்த்தம்?...நான்.....வீட்டுலதான் இருக்கேன்.....
(நான் நீங்க?........என்று கேட்கும் முன்னமேயே....... கூப்பிட்டவர்.......)

எப்படி இருக்கீங்க அண்ணி?  எப்ப வந்தீங்க (கேள்வி எல்லாம் சரிதான்.  நான் பாண்டிச்சேரிக்கும், சென்னைக்குமாக அடிக்கடி பிரயாணம் செய்து கொண்டிருந்த நேரம்... ஆனா இது யாரா இருக்கும்...நேரடியா என்னை அண்ணினு வேற.....ஒருவேளை மாமியார், மாமனார் சைட் ஆளா இருக்குமோ....)

நல்லாருக்கேன்.....போன மாசம் வந்தேன்....(நான் என் தலைமுடிய பிச்சுகிட்டுருந்தேன் யார் இதுனு...நான் கேக்கறதுக்குள்ளயும் அவரு என்ன பேச விட்டாத்தானே) 

போனமாசாமா?  அப்ப ஒரு மாசமா நீங்க இங்கதான் இருக்கீங்க....ஆனா எங்க வீட்டுக்கு ஒரு தடவை கூட வரவே இல்ல...ஏன் அண்ணி ஏன்?

யார் பேசுறீங்கனு தெரிஞ்சுக்கலாமா? (ஹப்பா கேட்டுட்டேன் அந்தக் கேள்விய)

அண்ணி!!!!  என்ன கொடுமை இது?  என்ன தெரில?  என் வாய்ஸ் தெரில? இது ரொம்ப மோசம் அண்ணி ..(எனக்கு மெய்யாலுமே ரொம்பக் குழப்பமா இருந்துச்சு....பதிலே சொல்லாம விளையாடுறாரு...)
???????????
 அண்ணி நீங்க ரொம்ப மோசம்!  நீங்க சென்னைய விட்டு போகும்போது எங்க யார்கிட்டயும் சொல்லவே இல்ல.. (ரொம்ப சரியாதான் இவரு பேசறாரு...நான் யார்கிட்டயும் சொல்லலதான்....சொல்ல முடியாம ஒரு நிலைமை அந்த நேரம்...பாண்டிச்சேரிக்குத் தற்காலிகமாக என் ஜாகை மாற்றியது என் பையனுக்கு காலேஜ் அட்மிஷன் கிடைச்சது பற்றி ரொம்ப நெருங்கிய சொந்தங்களுக்கு மட்டும்தான் சொன்னேன்.)

ஓ! ரொம்ப ஸாரி....ம்ம்ம்ம்ம்......(மனுஷன் பேசவிட்டாத்தானே.....அவரே பேசிக்கிட்டிருந்தாரு.....)

அண்ணி நீங்க ஒரு பார்ட்டி கூட தரல எங்களுக்கு....ரொம்ப வருத்தம்....எவ்வளவு நாள் ஆச்சுனு தெரியுமா உங்க சாக்கோ ஸ்வீட் சாப்ட்டு........நீங்க இப்பவும் செய்றீங்களா அண்ணி? என்ன டேஸ்ட்!!........ மறக்கவே முடியாது.....(இதுவும் கரெக்ட்டுதான்............நான் செய்து எல்லாருக்கும் கொடுக்கறதுண்டு...என்னடா ரொம்ப தெரிஞ்சவரு போல.....)
அண்ணி அந்த ஸ்வீட்ஸ் செஞ்சு கொடுத்து விடுங்க.........ஓகேயா?......அண்ணன் எப்படி இருக்காரு?  அண்ணனும், நீங்களும் வீட்டுக்கு வாங்க....நாங்க எல்லாரும் உங்கள ரொம்ப எதிர் பார்க்கறோம்........அம்மா, அப்பா எப்படி இருக்காங்க?...(எல்லாமே ரொம்ப பொருத்தமா இருக்குதே.......ஆனா ஆளு செம வேகம்....எனக்கு பல கேள்வி புரிஞ்சுக்க கூட முடில.....அவரே கேள்வி கேட்டு....அவரே பதிலும் சொல்லிக்கிட்டாரு..)
அண்ணி இப்ப டூர் எல்லாம் போறதே இல்லையா?  பிஸி இல்லையா?  ஆமா நீங்க தான் இப்ப சென்னைல இல்லைல........ஆமா...... நீங்க சென்னைக்கு ட்ரான்ஸ்ஃப்ர் ட்ரை பண்ணலையா அண்ணி?  ஏன் அண்ணி? ப்ளீஸ் அண்ணி சென்னைக்கு வந்துருங்களேன்.....ம்ம்ம் அண்ணா இல்லீங்களா?  இல்லைனா ஓகே...நான் அவருக்கு ஒரு மெயில் கொடுத்துருக்கேன்.... அவரு வந்த உடனே பார்த்து பதில் கொடுக்க சொல்லுங்க...இல்லனா என்ன கூப்பிடச் சொல்லுங்க அண்ணி.... ரொம்ப அர்ஜென்ட்  அண்ணி...(அவரு பாட்டுக்கு பேசிட்டே போனாரு....)

ஹப்பா....ஒரு வழியா சஸ்பென்ஸ் உடைஞ்சுச்சு..... யாருன்னு தெரிஞ்சு போச்சுங்க.....என் கணவரின் தம்பிக்கு வந்த கால் ங்க....அவரு ஃப்ரெண்ட்.... .....(என் கணவரின் தம்பி பிஸினஸ் செய்கிறார். அவரின் மனைவி நல்ல வேலையில் இருக்கறவங்க.....வேற ஒரு ஊருக்கு மாத்தலாகி போயிருந்தாங்க.........அவங்களும் இந்த மாதிரி ஸ்வீட்ஸ் எங்கிட்ட கத்துக்கிட்டு செய்வாங்க.....ஸோ....)

ஓ! உங்களுக்கு ----------அவர்கிட்டயும் அவங்க வொய்ஃப் கிட்டயும் பேசணுமா....அவங்க.. இப்ப வீட்டுல இல்ல.....அவங்க வந்ததும்.......

ஆமா!.......ஓ! அப்ப நான் தெரியாம அந்த அண்ணினு நினைச்சுட்டேன்.....ஸாரி ......ஸோ அப்ப நீங்க  ----------அண்ணி?  எப்படி இருக்கீங்க?  எப்ப வந்தீங்க? 
(ஐயோ! கடவுளே! திரும்பவுமா?!!!  அந்த ‘கால் ஐ கட் பண்ண நினைச்சு....)
---------அவரு வீட்டுல இல்ல....ஸோ நீங்க அப்புறமா கூப்பிடுங்க......நானும் உங்க ஃபெரெண்டுகிட்ட சொல்லறேன்....தொலைபேசியை படுக்கவைத்து விட்டு...திரும்பினா....

ஏய்!--------என்ன ப்ண்ணிக்கிட்டு இருக்க ஃபோன கையில வைச்சுக்கிட்டு......அங்க பாரு ஏதோ அடுப்புல தீயற வாசன வருது....என் மாமியார் கோபத்துல கத்தினாங்க....நியாயமான கோபம்......ஓ! கடவுளே!!...அந்த உருளைகிழங்கு வறுவல்......ரஸம் கொதிச்சு வத்தி..பாத்திரம் அடிப்பிடிச்சு......


(கார்ட்லெஸ் வொர்க் பண்ணாததுனால.வந்த வினை....இருந்தாலும்........இப்ப எல்லாம்...லாண்ட் லைன்ல வர ‘கால்னாலும் சரி...மொபைல்னாலும் சரி ...இந்த மாதிரி கால்ஸ் எப்படி சமாளிக்கணும்னு கத்துக்கிட்டேன்...)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக