ஞாயிறு, 4 ஆகஸ்ட், 2013

மனம் குரங்காய் மாறிய அந்த நிமிடங்கள்



இது இருபதாவது நடைநான் வீட்டின் உள்ளும் வெளியுமாக நடந்து கொண்டிருக்கின்றேன். கண்கள் வெளியே வாசற்கதவைத் தாண்டி தெரு முனையையே பார்த்துக் கொண்டிருக்கின்றதுஎல்லாம் என் குழந்தையைக் காணாமல்தான்குழந்தை என்றதும், ஏதோ எல்.கே.ஜி படிக்கும் குழந்தை என்று நினைத்து விடாதீர்கள்எட்டாம் வகுப்பு படிக்கும் பதின்மூன்று வயது பையன்அதனால் என்னஎத்தனை வயதானாலும் அம்மாவிற்கு குழந்தை, குழந்தை தானே! னால், சைக்கிளில் சென்றுள்ளதால் இந்தக் கவலை. 4.15 மணிக்கு பள்ளி முடியும் நேரம்சரியாக 4.45 மணிக்கு அம்மா என்று அழைத்துக் கொண்டே வந்து நிற்பான்.  
 ஆனால் ன்று மணி 5.30 ஆகியும் வரவில்லை.  நாங்கள் இருப்பது சென்னையின் போக்குவரத்து நெரிசல் அதிகமான பகுதியில்.  அவனது பள்ளியும் அதுபோன்ற பகுதியாதலால் நெரிசலான இடம் வழியாகத்தான் செல்ல வேண்டும்.

           
இரண்டு வாரம் முன்புதான் அவன் தெருவை சைக்கிளில் தாண்டும் போது, வேகமாக வந்து தெருவில் திரும்பிய ஒரு கார்  இவனைத் தள்ளி விட்டுச் சென்று விட்டதுநல்லவேளை இறைவன் அருளால் சிறிய காயங்களுடன் தப்பித்தான்அந்த நினைவினாலோ என்னவோ இன்று மனம் நிலை கொள்ளாமல் தவிக்கின்றதுஒருவேளை நண்பர்களுடன் விளயாடிவிட்டு வருவானோஇல்லை ஏதாவது எக்ஸ்ட்ரா வகுப்புகள் இருக்குமோஇல்லையென்றால் விளையாட்டுப் பயிற்சி வகுப்பாக இருக்குமோஆனால் எதுவாக இருந்தாலும் முன்பே சொல்லிவிடுவானே, தான் தாமதமாக வர நேரிடலாம் என்றுமனம் மரத்திற்கு மரம் தாவிக்கொண்டு இருக்கின்றதுஒரு வேளை அன்று போல் சைக்கிளில் வரும்போது ஆக்சிடென்ட் ஆகி இருக்குமோஹாஸ்பிட்டலில்?....இல்லை அடிபட்டு ரோட்டில் யாருடைய உதவியும் இல்லாமல் கிடக்கிறானோஇது சென்னையில் பரவலாக  நடப்பதுதானே……… ஐயோ கடவுளே! அப்படி இருக்கக் கூடாது
ஒரு பக்கம் உதடுகள் கடவுளைப் பிரார்த்திக்க, மறு பக்கம் மனம் தவிக்க, தெருவைப் பார்த்தபடியே அதோ ஸ்கூல் யூனிஃபார்ம்…….சைக்கிள்…..குழந்தையேதான்……தவிப்பு அடங்கும் நேரம்……….அந்த சைக்கிள் அருகில் வர வர…..….என் பையன் இல்லை……..மனதில் ஏமாற்றம்………மறுபடியும் தவிப்பு………

ட்ரிங்க்…….ட்ரிங்க்…..இது………என்ன………..இந்த நேரத்தில் டெலிஃபோன் அடிக்கிறதுநம் வீட்டில்தானோஒருவேளை ஸ்கூல் டீச்சர்

     ஹலோ……..இந்த நம்பர்……...தானே……..நான் ஸ்கூலில் இருந்து உங்கள் மகனின் டீச்சர் பேசறேன்….உங்கள் பையன் அடிபட்டு ஹாஸ்பிட்டலில்……………

     ஐயோ!.......என் குழந்தைக்கு என்னாயிற்று?  ஹாஸ்பிடலுக்கு ஓடுகிறேன்ஹாஸ்பிட்டல் வாசனை…………..நர்சுகள் அங்குமிங்கும் வேக வேகமாக நடக்கின்றார்கள்..... என் பையனுக்கு என்னாயிற்று?  யாரும் ஒழுங்காகப் பதில் சொல்லத் தயங்குகிறார்களே. இது என்னக் கொடுமை?.....இறைவா என் செல்லக் குட்டிக்கு எதுவும் ஆகியிருக்கக் கூடாது…….யாரிடம் கேட்பது அவனுக்கு என்னாயிற்று என்று…….இறைவா…………………………

அம்மா…….அம்மா……….... ..இதுஇது…….என் செல்லக் குட்டியின் குரல் போன்று உள்ளதேஹாஸ்பிட்டலா இல்லை வீடா ஐயோ! எனக்கு ஒரே குழப்பமாக இருக்கிறதே………………..

ட்ரிங்க்……ட்ரிங்க்……! இன்னும் டெலிஃபோன் அடிக்கின்றதே…………………எடுக்கின்றேன்

ஹலோ!..............ஹலோநல்லசிவம் வீடுங்களா?.......................இல்லீங்க இது ராங்க் நம்பருங்க.   பெருமூச்சுவிட்டபடி ஃபோனை வைத்துவிட்டுத் திரும்பும் சமயம்

     “அம்மாஸாரிம்மா நான் காலைல சொல்ல மறந்துட்டேன்இன்னிக்கு லேட்டாகும்னுஇன்னிக்கு கேம்ஸ்ல, ரிலே டீமுக்கு செலெக்ஷன் மா……..அதான் லேட்டு”.  என் மகனைப் பார்த்ததும் எனக்கு சந்தோஷத்தில் என்ன சொல்வதென்று தெரியவில்லை.
என்னம்மா, என்ன இப்படிப் பார்க்கற…….நான் என்ன சின்னக் குழந்தையா? கேர்ப்ஃபுல்லாதான் வருவேன்மாபயப்படாதம்மா”  என்ற பதிலில் எனக்கு மன உறுதி வந்தாலும், அந்த சில நிமிடங்களில்……………….தமிழ் படங்களில் வருவது போல வேக வேகமாக காட்சிகள் மனத்திரையில் விரிந்ததே…………….இத்தனையும் நான் டெலிஃபோன் ரிசீவரை எடுக்கும் முன்………………என்னென்ன விபரீதமான எண்ணங்கள் மனதைக்  குரங்காக மாற்றி மரத்துக்கு மரம் தாவ வைத்தது. எல்லாம் என் செல்லக் குட்டியின்அம்மாஎன்ற வார்த்தையைக் கேட்டதும் சூரியனைக் கண்ட பனி மூட்டம் போல் மறைந்தே போனது.

     அந்த ஒரு சில நிமிடங்களில் என் மனம் எப்படித் தாவி தாவி அலை பாய்ந்ததுஎன்னென்ன எதிர்மறையான எண்ணங்கள் மனதில் தோன்றின என்று இப்போது நினைக்கும் போது சிரிப்புதான் வருகின்றதுஇதைத்தான்மனம் ஒரு குரங்கு”  என்று சொல்லுகிறார்களோ? எப்பொழுதோ ஏதொ ஒரு புத்தகத்தில் பொன்மொழியாகப் படித்த ஞாபகம்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக